ஓபிஎஸ் கோரிக்கை.. “கணவன் அங்கே.. மனைவி இங்கே”.. அமைச்சர் பதிலால் குலுங்கி குலுங்கி சிரித்த சபாநாயகர்
சென்னை : சட்டப்பேரவையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதிலால் சபாநாயகர் அப்பாவு குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.
இன்று சட்டசபையில் வார்டு மறுவரையறை தொடர்பாக ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை வைக்க அதற்கு அமைச்சர் நேரு பதிலளித்தார். அதைத்தொடர்ந்து அதே விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, உங்க ஆட்சியில் தான் இப்படி செய்திருக்கிறீர்கள் என்று பதில் சொல்லவே, சபாநாயகர் அப்பாவு சத்தமாகச் சிரித்தார்.

வார்டு எல்லை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டு எல்லைகளை மறுவரையறை செய்ய தமிழ்நாடு அரசு முன்வருமா என எம்.எல்.ஏ ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் நேரு பதில்
அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும் என்றும் வார்டு மறுவரையறை தொடர்பாக அதிகாரிகளில் குழு அமைத்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும், சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகளிலும் வார்டு எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் வைத்த கோரிக்கை
அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், வார்டு மறுவரையரை செய்யும் போது பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும், தந்தை ஒரு வார்டிலும், மகன் ஒரு வார்டிலும் இருக்கும் சூழல் இருக்கிறது. இதன் மூலம் குழப்பம் ஏற்படுகிறது. இதனையும் கவனத்தில் கொண்டு கூட்டுக் குடும்பமாக இருப்பவர்களை ஒரே வார்டில் மறுவரையரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

குலுங்கி குலுங்கி சிரித்த அப்பாவு
உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, கணவர் ஒரு இடத்திலும், மனைவி ஒரு இடத்திலும் இருந்தால் அதற்குப் பேர் குடும்பம் இல்லையே என சிரித்தபடி கூறினார். பின்னர் ஓபிஎஸ் கோரிக்கைக்குக் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஒரு ஊரிலே செல்வாக்கு மிக்க நபர் தான் ஒரு வார்டில் நின்று கொள்ளலாம், தனது மனைவியை வேறு ஒரு வார்டில் நிறுத்தலாம் என்றுதான் திட்டமிட்டே பிரித்து வைத்துக் கொள்கிறார்கள், அதுவும் அதிமுக ஆட்சிக் காலத்தில் 2017ல் தான் இப்படி நடந்துள்ளது. இப்படி வார்டு மறுவரையறை செய்து தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்திருக்கிறீர்கள் என்றார். இதைக் கேட்டு சபாநாயகர் அப்பாவு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

வார்டு மறுவரையறை
தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை இரு துறைகளின் அதிகாரிகளும் இணைந்து, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து குழு அமைத்து, இந்த விவகாரத்தை கவனித்து, மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டு மறுவரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications