Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள்
சென்னை: சென்னை பெரம்பூர் தொகுதியில், அதாவது முதல்வர் விஜய்யின் தொகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர் மின்வெட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோடைக் காலம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மீண்டும் மின்வெட்டு பிரச்சினை தலை தூக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் இந்த மின்வெட்டு இரவு நேரங்களில் இருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளதால் இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மின் வாரிய அலுவலகத்தினர் போனை எடுக்காததால் நேராக அந்த அலுவலகத்திற்கே அவர்கள் செல்கிறார்கள். அங்கு அதிகாரிகள் முறையாக பதில் தெரிவிக்காததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
இந்த நிலையில் நள்ளிரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு அருகே கரிகாட்டுக்குப்பம் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் கொந்தளித்து போன பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை போல செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் சுமார் 3 மணி நேரமாக மின்வெட்டு நீடித்ததால் மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் குற்றம்சாட்டினர். பெரம்பூர் தொகுதியில் மின்வெட்டை கண்டித்து இரவில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பொன்னேரியை அடுத்த ஆரணியிலும் 1 மணி நேரத்திர்கும் மேலாக நீடித்த மின்வெட்டைக் கண்டித்து, நள்ளிரவில் சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டனர். அண்மைக்காலமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னைவாசிகள் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் கொளுத்தி எடுத்ததால் வியர்வை, புழக்கம், கொசுக்கடியில் தவித்து வருகிறார்கள். இதில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டால் மின்வாரிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டாலும் அது எப்போதும் பிஸியாகவே உள்ளது. இதில் புகார் தெரிவித்தாலும் உடனடியாக தீர்த்து வைக்கப்படுவதும் இல்லை. இதனால் இரவு நேர மின்வெட்டை நினைத்து பொதுமக்கள் அச்சத்தில் உறைய தொடங்கிவிட்டார்கள்.
கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், இணைநோயால் அவதிப்படுவோர் என தூக்கத்தை தொலைத்து அவதிப்படுகிறார்கள்.
இதனால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும் உடல்நிலை மேலும் பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. முட்டுக்காட்டை தொடர்ந்து சென்னை பெரம்பூர் உதயசூரியன் நகர், சத்தியமூர்த்தி நகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக ஏற்படும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து நேற்றிரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் முதல்வர் விஜய்யின் தொகுதியிலேயே பவர் கட் என்பதை மக்களால் நம்ப முடியவில்லை.
முதல்வர் விஜய் வசித்து வரும் நீலாங்கரை பகுதியில் கூட கடந்த சில தினங்களுக்கு முன்பு பவர் கட் ஏற்பட்டு மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். போராட்டமும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா?












Click it and Unblock the Notifications