Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஸ் ஊழியர்கள் பென்சன்.. சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணியில் இருந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஆயுட்கால சான்றிதழை பணிமனைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு பிறகு மாதா மாதம் சரியான முறையில் ஓய்வூதியம் பெறுவதற்கு தங்களுடைய ஆயுட்காலச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கான ஆதாரமாக ஆயுட்கால சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Retired Bus workers should submit the life certificate at the workplaces: MTC

அப்போதுதான் சரியான முறையில் ஓய்வூதிய தொகை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் பணியில் இருந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஆயுட்கால சான்றிதழை பணிமனைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "மாநகர் போக்குவரத்து கழகத்தில் ஏறத்தாழ 19,652-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். ஏறத்தாழ 14,300-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றுள்ளோருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்காலச் சான்றிதழை ஏற்கனவே, நடைமுறையில் உள்ளவாறு தாங்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம், பணிமனையிலேயே சமர்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் வருகிற 2024-ம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் ஜனவரி 1-ந்தேதி தொடங்கி, மார்ச் 15-ந்தேதிக்குள்ளாக அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வரும்பொழுது, ஓய்வூதிய உத்தரவு ஆணை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தலைமையகத்தில் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் தலைமையகத்திலும், பட்டுலாஸ்சாலை தொழிற்கூடத்தில் (பி.ஆர்.டி.), மண்டல தொழிற்கூடத்தில் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், அந்தந்த அலுவலகத்தில் ஆயுட்கால சான்றிதழ் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கே.கே.நகர் பயணச்சீட்டு அச்சகத்தில் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள். கே.கே.நகர் பணிமனையிலும், குரோம்பேட்டை பஸ் கூடுகட்டும் பிரிவில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் குரோம்பேட்டை-1 பணிமனையிலும் தங்களின் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விடுபட்டவர்கள் தலைமை அலுவலகத்தை அணுகி, தங்களின் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது." இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+