Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்க எப்ப வந்தாலும் ஓசியில் பால் தரணும்.. ஊழியரை தாக்கி அட்டகாசம் செய்த ரவுடிகள்.. ஷாக் CCTV காட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்திற்கு வந்த ரவுடிகள் சிலர் 5 பால் பாக்கெட்டுகளை வாங்கி விட்டு அதற்கான பணம் தராமல் அடாவடி செய்துள்ளனர். மேலும், கல்லாப் பெட்டியில் உள்ள பணத்தை தருமாறும் கூறி அந்த பாலகத்தில் பணியாற்றும் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆவின் நிறுவனம் 4 லட்சம் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 34 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும், 2 லட்சம் லிட்டர் பால், ஆவின் நிறுவனத்தால் வெண்ணெய், பால் பவுடர் போன்ற உப பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலகங்கள் மூலமாக பால் மற்றும் பால் தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Aavin Aavin milk chennai


தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் பகுதியில் சண்முகவள்ளி என்பவர் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். நேற்று இரவு கடைக்கு பால் வாங்க வந்த நபர்கள் 5 பால் பாக்கெட்டுகளை வாங்கி விட்டு அதற்கான பணம் தராமல் அடாவடி செய்துள்ளனர். மேலும், கடையில் இருந்த கல்லாப் பெட்டியில் உள்ள பணத்தை தருமாறும் கூறி அந்த பாலகத்தில் பணியாற்றும் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இனி நாங்கள் வரும் போதெல்லாம் பால் பாக்கெட்டுகளை இலவசமாக தர வேண்டும் இல்லை என்றால் நடப்பதே வேறு என மிரட்டிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகவள்ளியின் கணவர் சாத்தையா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் ஆவின் பாலகத்தில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பால் முகவர்கள் தொழிலாளர் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு தாம்பரம், சேலையூர், மெப்பேடு சந்திப்பு பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வரும் சண்முகவள்ளி (க/பெ மு.சாத்தையா) என்கிற பால் முகவரின் பாலகத்திற்கு நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பால் வாங்குவது போல் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆவின் பாலகத்தில் பால் பாக்கெட்டுகளை வாங்கி விட்டு கடையில் இருந்த பணத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் பணியில் இருந்தவர் மீது கொலைவெறி தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மேலும், நாங்கள் வரும் போதெல்லாம் பால் பாக்கெட்டுகளை இலவசமாக தர வேண்டும் இல்லையேல் நடப்பதே வேறு என மிரட்டிச் சென்றுள்ளனர். ஆவின் பாலகத்தில் பால் வாங்கிவிட்டு பணம் தராமல், ஊழியரை தாக்கிய ரவுடிகளின் சமூக விரோத செயல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன் சம்பந்தப்பட்ட ரவுடிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+