நாங்க எப்ப வந்தாலும் ஓசியில் பால் தரணும்.. ஊழியரை தாக்கி அட்டகாசம் செய்த ரவுடிகள்.. ஷாக் CCTV காட்சி
சென்னை: தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்திற்கு வந்த ரவுடிகள் சிலர் 5 பால் பாக்கெட்டுகளை வாங்கி விட்டு அதற்கான பணம் தராமல் அடாவடி செய்துள்ளனர். மேலும், கல்லாப் பெட்டியில் உள்ள பணத்தை தருமாறும் கூறி அந்த பாலகத்தில் பணியாற்றும் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆவின் நிறுவனம் 4 லட்சம் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 34 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும், 2 லட்சம் லிட்டர் பால், ஆவின் நிறுவனத்தால் வெண்ணெய், பால் பவுடர் போன்ற உப பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலகங்கள் மூலமாக பால் மற்றும் பால் தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் பகுதியில் சண்முகவள்ளி என்பவர் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். நேற்று இரவு கடைக்கு பால் வாங்க வந்த நபர்கள் 5 பால் பாக்கெட்டுகளை வாங்கி விட்டு அதற்கான பணம் தராமல் அடாவடி செய்துள்ளனர். மேலும், கடையில் இருந்த கல்லாப் பெட்டியில் உள்ள பணத்தை தருமாறும் கூறி அந்த பாலகத்தில் பணியாற்றும் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இனி நாங்கள் வரும் போதெல்லாம் பால் பாக்கெட்டுகளை இலவசமாக தர வேண்டும் இல்லை என்றால் நடப்பதே வேறு என மிரட்டிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகவள்ளியின் கணவர் சாத்தையா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் ஆவின் பாலகத்தில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பால் முகவர்கள் தொழிலாளர் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு தாம்பரம், சேலையூர், மெப்பேடு சந்திப்பு பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வரும் சண்முகவள்ளி (க/பெ மு.சாத்தையா) என்கிற பால் முகவரின் பாலகத்திற்கு நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பால் வாங்குவது போல் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆவின் பாலகத்தில் பால் பாக்கெட்டுகளை வாங்கி விட்டு கடையில் இருந்த பணத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் பணியில் இருந்தவர் மீது கொலைவெறி தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
மேலும், நாங்கள் வரும் போதெல்லாம் பால் பாக்கெட்டுகளை இலவசமாக தர வேண்டும் இல்லையேல் நடப்பதே வேறு என மிரட்டிச் சென்றுள்ளனர். ஆவின் பாலகத்தில் பால் வாங்கிவிட்டு பணம் தராமல், ஊழியரை தாக்கிய ரவுடிகளின் சமூக விரோத செயல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன் சம்பந்தப்பட்ட ரவுடிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications