திருந்திய பிறகும் தொல்லை கொடுக்கும் போலீசார் ... வேறு வழியில்லை...ரவுடி செய்த காரியம்
சென்னை: திருந்தி வாழ்வதாக கூறிய பிறகும் போலீசார் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக கூறி செல்போன் டவர் மீது ஏறி ரவுடி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை கொடுங்கையூர் சேலை வாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற ஓட்டை வடை மணி(29). இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது.

சென்னை ரவுடி
மணிகண்டன் மீது முட்டை கோபி என்ற ரவுடியை கொலை செய்த வழக்கு உட்பட 7 வழக்குகள் உள்ளன தற்போது ரவுடி மணிகண்டன் வழக்குகளில் எதுவும் சிக்காமல் திருந்தி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் தொடர்ந்து தனக்கு தொந்தரவு தருவதாக கூறி இன்று காலை கொடுங்கையூர் தண்டையார்பேட்டை ஹை ரோடு சின்னான்டிமடம் அருகே செல்போன் டவர் மீது மணிகண்டன் திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தற்கொலை மிரட்டல்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் நண்பர்கள் மணிகண்டனை கீழே இறங்கி வரும்படி கூறினார்கள். ஆனால் பாதி அளவு செல்போன் டவரில் ஏறிய ரவுடி மணிகண்டன் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி கொண்டே இருந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

போலீசார் பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவம் அறிந்து நேரில் வந்த கொடுங்கையூர் போலீசார் ரவுடியிடம் சமாதானம் பேசினர் 20 நிமிட போராட்டத்திற்கு பின்பு மணிகண்டன் பத்திரமாக கீழே இறங்கி வந்தார் அவரை கொடுங்கையூர் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தினர் குற்றச்சாட்டு
இது குறித்து மணிகண்டன் குடும்பத்தினர் கூறுகையில், திருந்தி வாழும் மணியை இன்பார்மராக மாறி குற்றவாளிகளை பிடித்து கொடுக்க சொல்லி போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர். இதற்கு மணிகண்டன் முடியாது என்று கூறியதால் பழைய வழக்கில் அவரை கடந்த வாரம் சிறைக்கு அனுப்ப போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். நீதிபதி முன்பாக தான் குற்றம் செய்யவில்லை என்றும் தான் திருந்தி வாழ்வதாக கூறியதை அடுத்து நீதிபதி விடுவித்தாலும் மணிகண்டனை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க போலீசார் முயற்சிப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications