எனது மக்கள் பாதை இயக்கம் வருங்காலத்தில் அரசியல் களத்தில் பங்கேற்கும்.. சகாயம்
சென்னை: நான் வழிகாட்டியாக இருக்கும் மக்கள் பாதை அமைப்பின் இளைஞர்கள் வரும் காலத்தில் அரசியல் களத்திலும் பங்கேற்கக் கூடும் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் காரனோடையை அடுத்த ஆத்தூரில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீர விளையாட்டுகளை அவர் கண்டு களித்தார். பின்னர் அவர் பேசுகையில், மக்கள் பாதை அமைப்பு தொடர்ந்து சமூக மாற்றத்திற்காக களத்தில் இயங்கி வருகிறது.

அடிமைத்தனம்
நிர்வாக மாற்றங்களை இது வருங்காலத்தில் உருவாக்கக் கூடும். நான் மிகவும் நேசிக்கக் கூடிய தமிழ் சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விழித்து எழ வேண்டும். அதை தட்டியெழுப்பும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்ய வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

ஒப்பற்ற சமூகம்
நமது தமிழ் சமூகம் நேர்மையான சமூகமாக இருந்திருந்தால் அது நேர்மையான தலைவர்களை வெளிக் கொண்டு வந்திருக்கும். நேர்மையான தலைவர்கள் இருந்திருந்தால், இந்திய நாட்டில் மட்டுமின்றி உலக சமூகங்களிலேயே ஒப்பற்ற சமூகமாக தமிழ் சமூகம் திகழ்ந்திருக்கும்.

சமூகம்
இப்போது அந்த நேர்மையோடு நம் சமூகத்தில் இருப்பதை பார்க்கிறேன். அதனால்தான் மக்கள் பாதை அமைப்பை சேர்ந்த தோழர்கள், இளைஞர்கள் நேர்மைச் சமூகத்தை உருவாக்க களமாடுகிறார்கள். நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு நேர்மை சமூகத்தை உருவாக்கும் முடிவுகளை இவர்கள் எடுப்பார்கள்.

நேர்மையுள்ள
தகுதியுள்ள, நேர்மையுள்ள நெஞ்சுரமுள்ள இந்த இளைஞர்கள் அரசியல் களத்திலும் பங்கேற்கக் கூடும் என சகாயம் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வில் செல்லவுள்ளதாக அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டதை அடுத்து அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா?










Click it and Unblock the Notifications