சரவண பவன் ராஜகோபாலுக்கு நேற்று இரவு திடீர் மாரடைப்பு.. மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள்
Recommended Video
சென்னை: சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு நேற்று இரவு திடீர் ஏன மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. வெண்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், தன்னுடைய ஓட்டலில் பணியாற்றியவரின் மகளான ஜீவஜோதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். இதக்காக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கில் அவரை உடனே நீதிமன்றத்தில் சரண் அடையும் படி உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து ராஜகோபால் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். வரும் போதே தனியார் ஆம்புலன்சில் தான் வந்தார். இதன் பின்னர் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவுப்படி சிறை செல்லும் போதே ராஜகோபாலின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
மீண்டும் சினிமா.... அரசியலுக்கு குட்பை சொல்லும் குஷ்பு... குவியும் ஆதரவு!
இதையடுத்து ஸ்டான்லி மருத்துமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் ராஜகோபாலை போலீசார் அனுமதித்தனர். அவரது உடல் நிலை மோசமாக இருந்து வரும் காரணத்தால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ராஜகோபாலுக்கு இதயம், சிறுநீரகம், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருப்பதால் அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ராஜகோபாலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது மகன் சரவணன், உறவினர்கள், மற்றும் உணவ ஊழியக்ரள் என அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தனர். அவரது உடல்நிலை தற்போது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும் உடல்நிலை மோசமாகவே இருப்பதால் ராஜகோபாலை வெண்டிலேட்டரில் வைத்து செயற்கை சுவாசம் கொடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். வெண்டிலேட்டரில் இருந்து இயல்பு நிலைக்கு அவரது சுவாசம் மாறிய பின்னரே உடல் நிலை குறித்து தெளிவான நிலை தெரியவரும் என தெரிகிறது.