ரூ 10 கோடி அபராதம் தானே.. அதெல்லாம் ஒரு மணி நேரத்தில் கட்டிடலாம்.. சசிகலா வழக்கறிஞர்
சென்னை : சசிகலா விடுதலை தொடர்பாக இம்மாத இறுதியில் தகவல் வரும் என வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் ரூ 10 கோடி அபராதத்தை ஒரு மணி நேரத்தில் செலுத்தி விடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார். அவரது தண்டனை காலம் வரும் ஜனவரி 27-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

ஆனாலும் அவரது நன்னடத்தை அடிப்படையில் இந்த மாத இறுதியில் விடுதலையாவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமானால் சம்பந்தப்பட்ட கைதி அதற்கான விண்ணப்பத்தை சிறைத் துறையிடம் அளிக்க வேண்டும்.
ஆனால் சசிகலா , இளவரசி, சுதாகரன் ஆகிய யாரும் இதுவரை அப்படி விண்ணப்பிக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில் சிறையில் இருக்கும் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினால்தான் அவர் என்ன முன்கூட்டியே விடுதலை ஆக விரும்புகிறாரா, அல்லது ஜனவரி 27- வரை காத்திருக்கிறாரா என்பது தெரியவரும். இதற்காக கர்நாடகா சிறைத் துறையினரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
கர்நாடகா சிறையில் இருக்கும் கைதிகளை பார்க்க இதுவரை யாரையும் அனுமதிக்கவில்லை என கூறிவிட்டனர். கொரோனாவால் மார்ச் மாதத்தில் இருந்து கைதிகள் யாரையும் பார்க்க முடியாத நிலை உள்ளது. எங்களை பொறுத்தவரை இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலையாக அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சிறைத் துறையினர் தகவல் கொடுப்பார்கள் என நம்புகிறோம் என ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
சசிகலாவுக்கான அபராத தொகை ரூ 10 கோடியை செலுத்துகிறீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு உடனே ஒரு மணி நேரத்தில் பணத்தை செலுத்தி விடுவோம் என ராஜா செந்தூரப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications