நிம்மதியே போச்சு.. மீண்டும் ‘அது’ நடக்க வேண்டும்! நாடாளுமன்ற தேர்தலுக்கு களமிறங்கிய சசிகலா! என்னாச்சு?
சென்னை : திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது எனவும் மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் என சசிகலா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவை பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை சுற்றியே அரசியல் புள்ளி சுழன்று கொண்டிருக்கிறது ,
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அதிமுக நிர்வாகிகள் கூறி வந்தாலும், எந்த ஒரு நிர்வாகியும் ஒருமுறை கூட அவரது பெயரை உச்சரிக்காமல் கடந்து சென்று விட முடியாது. அந்த அளவுக்கு தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் சசிகலா.

அதிமுக விவகாரம்
இந்நிலையில் அதிமுகவில் இரட்டை தலைமையை ஒழித்து ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என்ற சர்ச்சை அதிகமாகி வரும் நிலையில், இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென 3வது கட்ட புரட்சிப் பயணத்தை சசிகலா மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவர் பயணத்தை தொடங்கியுள்ளார். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் என்றே இந்த பயணத்தை சசிகலா நடராஜன் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சசிகலா
வேன் மூலம் செங்கல்பட்டு மறைமலைநகர் சிங்கம்பெருமாள் கோவில் பழைய பேருந்து நிலையம் திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே 100 அடி உயரத்தில் இருந்து அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பல இடங்களில் தொடர்ந்து வரவேற்பு அளித்தபடி உடன் வந்தனர். இதில் சில அதிமுக பிரமுகர்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு இல்லை
தொடர்ந்து தொண்டர்களிடையே பேசிய அவர்," கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்தபோது மக்களுக்காக நூற்றுக்கணக்கான திட்டங்களை அறிவித்தார். பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால் திமுக அத்தியாவசிய பொருட்களின் விலை சொத்து வரி மின் கட்டணம் என அனைத்துமே உயர்த்தப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தற்போது பெண் காவலர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையாக மாறி இருக்கிறது.

நிம்மதி இல்லை
அதிமுக ஆட்சியில் காவலர்கள் காலரை தூக்கி விட்டு நடந்தார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. தமிழகத்தில் எங்கும் போதை பொருள் கிடைக்கும் நிலை இருக்கிறது. வரி என்ற பெயரில் 20 மாதங்களாக திமுக மக்களிடமிருந்து வசூலிக்கிறது தவிர மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். இனி அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழக மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். அதிமுக ஆட்சியில் தான் ஏழை மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

கடும் உழைப்பு
எனவே கட்சியினர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இன்னும் நூறு ஆண்டுகளை கடந்தாலும் மக்களுக்காகவே நாம் சேவை செய்ய வேண்டும். ஜெயலலிதா ஆட்சி அமைந்த உடன் இந்த பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலேயே நிறைவேற்றி தரப்படும்' என்றார்.

ஆளுநர் விவகாரம்
திருக்கழுக்குன்றம் பகுதியில் பிரச்சாரத்திற்கு பிறகு சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஆளுநர் உரை அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், அதற்கேற்ப உரை தயாரிக்கப்பட்டு மீண்டும் ஆளுநர் பார்வைக்கு அனுப்பப்படும். அதன் பிறகே, ஆளுநர் உரை அச்சுக்கு அனுப்பப்படும். ஆனால் தற்போது அப்படி நடந்ததா என தெரியவில்லை என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications