'விபச்சாரி' என்று சொன்ன புருஷன் கொலை.. 'குற்றமல்ல' என்று சுப்ரீம் கோர்ட் மாஸ் தீர்ப்பு!
கணவனை கொன்ற மனைவிக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனையை குறைத்துள்ளது.
சென்னை: விபச்சாரி...ன்னு சொன்ன புருஷனை கொலை செய்த சம்பவம் குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட் தமிழக வழக்கு ஒன்றில் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஷாக் தரும் வகையில் கொலை ஒன்று நடந்தது. கட்டின கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்தார். அவரது உடலை ரெண்டு பேரும் காருக்குள் தூக்கி போட்டு, ஒரு காட்டு பகுதிக்குள் எடுத்த சென்று எரித்தும் விட்டனர்.
இது சம்பந்தமாக கள்ளக்காதலர்கள் கைது செய்யப்பட்டு, அது சம்பந்தமான வழக்கு விசாரணை நடைபெற்று மாவட்ட செசன்ஸ் ரெண்டு பேருக்கும் தண்டனை தந்தது.

நீதிபதிகள் தீர்ப்பு
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதனால் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இது சம்பந்தமான வழக்கு நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சொன்னதாவது:

மனைவி, மகள்
"கணவர் தன்னையும், தனது மகளையும் விபச்சாரி என்று அழைத்ததால்தான் கடும் ஆத்திரம் ஏற்பட்டு கணவரை தாக்கி இருக்கிறார். நமது சமுதாயத்தை பொறுத்தவரை தன்னை விபச்சாரி என்று அழைப்பதை எந்த பெண்ணுமே ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படி இருக்கும்போது, தன்னை விபச்சாரி என்று சொன்னதோடு,தனது மகளையும் விபச்சாரி என்று சொன்னதால்தான் பெண்ணுக்கு ஆத்திரம் ஏற்பட்டு, ஆவேசத்தில் கொலையே செய்திருக்கிறார்.

10 ஆண்டு ஜெயில்
அதனால் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. அதே நேரத்தில் இதை மரணத்தை ஏற்படுத்திய குற்றமாக கருதி அதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும் என்பதால், கீழ்க்கோர்ட்டு இவர்கள் 2 பேருக்கு அளித்த தண்டனையை குறைத்து 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது" என்று தீர்ப்பளித்தார்கள்.

பரபரப்பு தீர்ப்பு
ஏற்கனவே கள்ள உறவு தவறில்லை என்று தீர்ப்பளித்து நாட்டையே அதிர்வுக்குள்ளாக்கிய நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டது குற்றம் இல்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு திரும்பவும் பரபரப்பாக்கி உள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications