'விபச்சாரி' என்று சொன்ன புருஷன் கொலை.. 'குற்றமல்ல' என்று சுப்ரீம் கோர்ட் மாஸ் தீர்ப்பு!
கணவனை கொன்ற மனைவிக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனையை குறைத்துள்ளது.
சென்னை: விபச்சாரி...ன்னு சொன்ன புருஷனை கொலை செய்த சம்பவம் குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட் தமிழக வழக்கு ஒன்றில் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஷாக் தரும் வகையில் கொலை ஒன்று நடந்தது. கட்டின கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்தார். அவரது உடலை ரெண்டு பேரும் காருக்குள் தூக்கி போட்டு, ஒரு காட்டு பகுதிக்குள் எடுத்த சென்று எரித்தும் விட்டனர்.
இது சம்பந்தமாக கள்ளக்காதலர்கள் கைது செய்யப்பட்டு, அது சம்பந்தமான வழக்கு விசாரணை நடைபெற்று மாவட்ட செசன்ஸ் ரெண்டு பேருக்கும் தண்டனை தந்தது.
நீதிபதிகள் தீர்ப்பு
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதனால் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இது சம்பந்தமான வழக்கு நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சொன்னதாவது:
மனைவி, மகள்
"கணவர் தன்னையும், தனது மகளையும் விபச்சாரி என்று அழைத்ததால்தான் கடும் ஆத்திரம் ஏற்பட்டு கணவரை தாக்கி இருக்கிறார். நமது சமுதாயத்தை பொறுத்தவரை தன்னை விபச்சாரி என்று அழைப்பதை எந்த பெண்ணுமே ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படி இருக்கும்போது, தன்னை விபச்சாரி என்று சொன்னதோடு,தனது மகளையும் விபச்சாரி என்று சொன்னதால்தான் பெண்ணுக்கு ஆத்திரம் ஏற்பட்டு, ஆவேசத்தில் கொலையே செய்திருக்கிறார்.
10 ஆண்டு ஜெயில்
அதனால் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. அதே நேரத்தில் இதை மரணத்தை ஏற்படுத்திய குற்றமாக கருதி அதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும் என்பதால், கீழ்க்கோர்ட்டு இவர்கள் 2 பேருக்கு அளித்த தண்டனையை குறைத்து 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது" என்று தீர்ப்பளித்தார்கள்.
பரபரப்பு தீர்ப்பு
ஏற்கனவே கள்ள உறவு தவறில்லை என்று தீர்ப்பளித்து நாட்டையே அதிர்வுக்குள்ளாக்கிய நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டது குற்றம் இல்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு திரும்பவும் பரபரப்பாக்கி உள்ளது.