Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவச லேப்டாப் திட்டம்.. மாணவர்களுக்கு செம குட்நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச லேப்டாப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டு மற்றும் நடப்பு கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு கொரோனாதான் காரணம் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான இலவச லேப்டாப்களை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்கள் ஒப்பந்தத்தை எடுக்க முன் வராததே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை

இதனிடையே தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. லேப் டாப்பிற்கு பதிலாக, மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டது. அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அன்பில் மகேஷ் பேட்டி

அன்பில் மகேஷ் பேட்டி

அதோடு மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளாக லேப்டாப் வழங்கப்படவில்லை என்பதால், இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாணவர்களுக்கான இலவச லேப்டாட் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இலவச லேப்டாப் ரத்து?

இலவச லேப்டாப் ரத்து?

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 11 லட்சம் லேப் டாப்கள் நிலுவையில் உள்ளது. அதனை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டேப் இல்லை என தகவல்

டேப் இல்லை என தகவல்

திமுக தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். ஆனால் தற்போதைய சூழலில், டேப்-ஐ விடவும் லேப்டாப் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆலோசித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இரு நாட்களுக்கு முன் லேப்டாப்களில் அச்சிடப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை அகற்ற தமிழக அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் இன்னும் சில மாதங்களுக்குள் மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+