Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடியோ காலில் கேவலம்.. ஆபாச மெசேஜ், அரைகுறை டிரஸ்.. ஒழுக்கத்தை கற்பிக்கும் டீச்சரே இப்படி செய்யலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுவர், சிறுமிகளின் நலனை காக்கவே போக்சோ உள்ளிட்ட சட்டங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுவர்களை தண்டிப்பதற்காகவே, நீதிமன்றங்களும் அரணாய் நின்று வருகின்றன. அப்படியிருந்தும், ஆண், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது... அதிலும், ஒழுக்கத்தையும், கல்வியையும் போதிக்கக்கூடிய ஆசிரியர், ஆசிரியைகளே அநாகரீகங்களில் இறங்கிவிடுவதை பார்க்கம்போது, அதிர்ச்சியாகவே உள்ளது.. என்ன நடந்தது மகாராஷ்டிராவில்?

கடந்த வாரம், ஆந்திரா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. சித்தூரை சேர்ந்த 19 வயது மாணவர் தனியார் கல்லூரியில் பி.டெக் முதல் வருடம் படித்து வருகிறார். அதே கல்லூரியில் 38 வயது பெண் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார்..

School Teacher arrested after video call with her class student and Double meaning message teacher in obscene dress

திருமணமான இந்த பெண், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.. அப்போதுதான், 19 வயது சித்தூர் மாணவருடன் நெருங்கி பழங்கி உள்ளார்.. மாணவரை காதலிப்பதாகவும் சொல்லியுள்ளார்.. மாணவரும் அந்த பெண்மணியை காதலித்தார்.

லேப் டெக்னீஷியன்

கடந்த மே மாதம், படிப்பு சம்பந்தமாக பெங்களூரில் டிரெயினிங் நடப்பதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு, லேப் டெக்னீஷியன் பெண்ணுடன் கிளம்பி சென்றார் மாணவர்..

ஆனால், அதற்கு பிறகு 2 மாதமாகவே வீட்டுக்கு வராததால், பெற்றோர் சந்தேகமடைந்து, விசாரித்தபோதுதான், லேப் டெக்னீஷியன் பெண்ணுடன், மகன் கிளம்பி சென்றது தெரியவந்தது..

பிறகு சித்தூர் 2-வது டவுன் போலீசில் பெற்றோர் புகார் தந்ததையடுத்து, விசாரணை நடந்தது.. பெங்களூருவில், லாட்ஜில் ரூம் எடுத்து, 2 மாதங்களாகவே மாணவருடன், அந்த பெண் ஊழியர் தங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையுமே அங்கிருந்து மீட்ட போலீசார், இருவருக்கும் அட்வைஸ் தந்து, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அசிங்கமான மெசேஜ்

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், மராட்டிய மாநிலத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.. நவி மும்பையில் செயல்பட்டு வரும் பிரபலமான பள்ளியை சேர்ந்த ஆசிரியை,, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்..

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில், கடந்த சில காலமாகவே இப்படியான அசிங்கமான மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்... இதன் அடுத்தக்கட்டமாக, அந்த மாணவருடன் அரை நிர்வாணமாக வீடியோ கால் பேசியுள்ளார் டீச்சர்.

இது சமீபத்தில்தான் மாணவரின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.. உடனே மாணவரின் அப்பா போலீசில் புகார் தந்தார்.. பள்ளி ஆசிரியையின் இந்த அருவெறுப்பான செயல், தன்னுடைய மகனை உளவியல் ரீதியாக பாதித்துள்ளது என்றும் புகாரில் கூறியிருந்தார்..

போக்சோவில் கைது

இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த டீச்சரை கைது செய்திருக்கிறார்கள்.. டீச்சரின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.. இதுபோல வேறு மாணவருக்கு இப்படியான மெசேஜ்களை அனுப்பியிருக்கிறாரா? என்று விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. அதேபோல, டீச்சரின் சோஷியல் மீடியா அக்கவுண்ட்களையும் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

சோஷியல் மீடியாவை தவறாக பயன்படுத்தும் ஒருசில மாணவ, மாணவிகளுக்கு நடுவில், ஆசிரியைகளும் சிக்கி வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது..

இப்படி நாளுக்கு நாள் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் போக்சோவில் கைதாவது, பெற்றோர்களை நிலைகுலைய வைத்து வருகிறது.. ஒழுக்கத்தை போதிக்கக்கூடிய ஆசிரியர்களே இப்படியென்றால்???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+