கொளுத்தி எடுக்கும் வெயில்.. இன்று 6 மாவட்டங்களில் சதம் அடித்த சூரியன்! சேலத்தில் தான் டாப்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வெயில் 6 மாவட்டங்களில் சதம் அடித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப அளவை தாண்டியுள்ளது. இதனால் பகலில் வெளியே செல்லாமல் குழந்தைகளும், முதியோரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் மதிய வேளையில் வெளியே செல்லும் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கட்டடங்களுக்கு வெளியே வேலை பார்ப்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மதிய வேளையில் வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இன்று வெப்பநிலை அதிகமாக பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் இன்று பதிவாகியுள்ளது. அதேபோல ஈரோடு, வேலூர், கரூர், மதுரை, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 26 ஆம் தேதி முதல் ஒரு சில இடங்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்திருந்தது. அதன்படி, 26-03-2025 முதல் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட படிப்படியாக 2- 3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் வெயில் 6 மாவட்டங்களில் சதம் அடித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. ஈரோடு, வேலூர், கரூர், மதுரை மாவட்டங்களில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் வறண்ட வானிலையை நீடிக்கும் எனவும், நாளை தென் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. எனினும், வட தமிழ்நாட்டில் நாளை வறண்ட வானிலையே நிலவும் என கணித்துள்ளது. நாளை மறுநாள் முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்ற ஆறுதல் செய்தியையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications