திமுகவுக்கு எஸ்டிபிஐ குடைச்சல்.. தேர்தலில் எதிர்ப்பு உறுதி! அதிமுக கூட்டணி உறுதியாகும் முன்பே முடிவு
சென்னை: 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி உறுதியாவதற்கு முன்பே திமுகவை தீவிரமாக எதிர்ப்பதாக முடிவு செய்து இருக்கிறது எஸ்டிபிஐ கட்சி தலைமை.
திருச்சியில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் குழுவின் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்த ஆலோசனையும் நடைபெற்றது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் சம்மந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநில தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த பத்தாண்டு பாஜக ஆட்சியின் அவலத்தை, மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும், அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும், கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் மாநில சுயாட்சிக்கு எதிரான போக்கையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், சிறுபான்மை மக்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களை காக்க ஒன்றிய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறுபான்மை சமூக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, ஏழை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நடவடிக்கையை விரைவுப்படுத்தும் அறிவிப்பையும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணிநிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பையும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவித்திட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைநகர் சென்னையில், முறையான ஏற்பாடுகள் இன்றி, அவசரகதியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் மக்கள் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகியுள்ளார்கள்.
மக்களின் பயணத்தை எளிமைப்படுத்துவதற்கு பதிலாக அவர்களை அவதிக்கும், அலைக்கழிப்புக்கும் உள்ளாக்கும் வகையில், மிகமோசமான திட்டமிடலுடன் அதனை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் செயல்படுத்தி வருகின்றது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் மக்களின் பயணநேரமும், செலவும் அதிகரித்துள்ளது. மக்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பதிலாக, மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் கட்டாய நடவடிக்கைகள் என்பது கண்டனத்திற்குரியது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சியின் எல்லையை விரிவுப்படுத்திக் கொண்டே செல்லும் அதே வேளையில், மக்கள் பயணத்திற்கான வசதியை வெகுதொலைவில் கொண்டு செல்வது ஏற்புடையதல்ல. ஆகவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதோடு, சென்னையில் உள்ள அனைத்து வெளியூர் பேருந்து நிலையங்களிலிருந்தும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் பேருந்து வசதிகளை செய்துகொடுக்க திட்டமிட வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது அரசு குறிப்பிடும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என இந்த கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், ராஜா ஹூசேன், நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர். " என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட்












Click it and Unblock the Notifications