25 + 15 + 400 தாமரை.. "விட்றாதீங்க, கவனம்".. மேலிட ரகசிய உத்தரவு.. தெம்புடன் தமிழக பாஜக.. என்னவாம்?
பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்தாராம்
சென்னை: அதிமுக, திமுக கட்சிகளின் பரபரப்புகளுக்கு நடுவே பாஜகவும் தன்னுடைய அதிரடியை சத்தமில்லாமல் துவங்கி உள்ளது.. இதுகுறித்த தகவல் ஒன்றுதான், அனைத்து தமிழக கட்சிகளையும் திரும்பி பார்க்கவைத்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, மதுரையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சுக்கள் இன்னமும் சோஷியல் மீடியாவில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
அண்ணாமலை அப்போது பேசியபோது, "15 இடங்களில் பாஜக வெற்றி உறுதி.. மிச்சம் 25 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது பாஜகவின் ஒரே லட்சியம்" என்றார்..
அதேபோல பொள்ளாச்சி கூட்டத்தில் பேசியபோது, "கடந்த 8 வருடகாலத்தில் பாஜக ஆட்சிக்கு மக்கள் ஆதரவு நல்ல நிலையிலேயே உள்ளது.. பாஜக நல்ல ஆட்சியையும் தந்துள்ளது.. ஆனால், தமிழக மக்கள் இந்த ஒரு வருடத்தில்தான் விரக்தியின் உச்சத்துக்கே போய்விட்டனர்.. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும்" என்று கூறியிருந்தார்.

25 தாமரைகள்
அதேபோல, பல்லடத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும்போது, "வரப்போகும் தேர்தலில் 400 எம்பிகளுடன் வெற்றி பெற்று மோடிஜியை மீண்டும் உட்கார வைக்க வேண்டும்.. மெஜாரிட்டிக்கு 273 எம்.பி போதும் என்றாலும், இந்த அமெரிக்காக்காரனை எல்லாம் மிரட்ட வேண்டும்.. 303 எம்பி கொடுத்ததற்கே பாகிஸ்தான், சீனாக்காரன் வாலை சுருட்டிக் கொண்டார்கள்.. 8 வருடங்களாகவே எங்கேயும் குண்டு வெடிக்கவில்லை. வெடித்தால் அந்த நாடே இருக்காது.. மோடி என்ற புதிய மந்திர சொல்தான் அந்த தைரியத்தை கொடுத்திருக்கிறது" என்றார் அண்ணாமலை.

தாமரைகள்
எல்லாவற்றிற்கும் மேலாக, "தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும்" என்று அமித்ஷா ஹைதராபாத் மாநாட்டில் சூளுரைத்ததையடுத்து, தமிழக பாஜக தன்னுடைய வேகத்தை கூட்டி உள்ளது.. அதற்கேற்றபடி சமீபத்தில் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, பாஜக தலைவர்களை சந்தித்து பேசியதும், அவர்களுடன் ஆலோசனை நடத்தியதும் கூடுதல் பலத்தை தந்து வருகிறது.

ஆ ராசா
ஆளுநர் மாளிகையில்தான் அன்றைய தினம் பிரதமர் தங்கியிருந்தார்.. அப்போது பாஜகவின் ஆலோசனை கூட்டம் அங்கேயே நடந்துள்ளது.. ஆனால், இவர்கள் எல்லாம் என்ன பேசினார்கள் என்பது இப்போது வரை உறுதியாக தெரியவில்லை.. அதேசமயம், சில யூகங்கள் றெக்கை கட்டி பறந்தன.. அதில், ஆ.ராசா பற்றிதான் நிறைய புகார்களை சொன்னார்களாம். பிறகு, திமுக அரசு பற்றியும், எடப்பாடி பற்றியும்கூட நிறைய தகவல்களை பிரதமருக்கு பாஸ் செய்ததாக கூறப்பட்டது. அந்த சமயத்தில், பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மோடி சில முக்கிய அட்வைஸ்களை தந்துள்ளார்..

விட்றாதீங்க
அதாவது, "நான் பலமுறை தமிழகம் வந்திருக்கிறேன். ஆனால், சமீபகாலமாக தமிழக மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்க்கிறேன்... அவர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர்.. அதை உணர்ந்து கட்சிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். திமுக என்பது சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கு எதிரான கட்சி... அதனால் திமுகவை நாம் எதிர்க்கும்போது, அது, தமிழ் மொழி, கலாசாரத்திற்கு எதிரான கட்சி என்பதுபோல மக்களிடம் சென்று சேர்ந்து விடக் கூடாது.. இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.. மாநில அரசு செய்யும் தவறுகளை, ஆதாரங்களுடன் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்" என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இன்ஸ்ட்ரக்ஷன்
அதுமட்டுமல்ல, மிக முக்கிய உத்தரவையும் அப்போது பிரதமர் பிறப்பித்து விட்டு போனாராம்.. ''சூழல் நமக்கு சாதகமாக இருக்கிறது.. அதனால், தமிழகம் முழுக்க அனைத்து ஓட்டு சாவடிகளிலும் பாஜக பூத் கமிட்டிகளை அமையுங்கள்" என்றாராம்.. பிரதமர் இப்படி தந்த உற்சாகத்தினால், பூரித்து போன பாஜக தலைவர்கள், பூத் கமிட்டிகள் அமைக்கற வேலையில் இறங்கி விட்டனராம்.. அந்த பணிகளை துரிதப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவு போடவும், அவர்களும் சுறுசுறுப்பாக பணியில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

தாமரைகள்
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்களாம்.. 2024 எம்பி தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளையும்விட முதலில் களமிறங்கி உள்ளது பாஜகதான்.. இதற்கான மும்முரத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பேயே துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.. அந்தவகையில்தான் பூத் கமிட்டி வேலைகளையும், பல கட்சிகளையும் ஓவர்டேக் செய்து கொண்டு, களத்தில் இறங்கி விட்டதாம் பாஜக.. ஆக, அண்ணாமலை சொன்னதுபோல், தமிழகத்தில் 25 தாமரைகளா? அல்லது 15 தாமரைகளா? அல்லது தேசிய அளவில் 400 தாமரைகளா? என்று உறுதியாக தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications