எங்க ஊரில் எப்படி பறை அடிப்பீங்க? சீமான் செய்யாறு பொதுக்கூட்ட எதிர்ப்புக்கு காரணமே இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரமதேசம் பொதுக் கூட்டத்தில் பறை இசைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது.

Recommended Video

    அரசேந்திரசோழன் விழா மேடையில் சீமானை டென்சனாக்கிய ஊர்மக்கள் - வீடியோ

    சோழப் பேரரசன் அரசேந்திரசோழன் பெருவிழா நிகழ்ச்சி திருவண்ணாமலை, செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். அவர் வருகை தருவதற்காக விழா மேடையில் பறை இசை இசைக்கப்பட்டது.

    சீமான் கூட்டம்

    சீமான் கூட்டம்

    பிரம்மதேசம் கிராமத்தில் பறை இசைக்கக் கூடாது என ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சி கொடியும் ஏற்றக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்புகளை மேடையில் சீமான் ஆவேசமாக சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்தும் வந்தார். அப்போதும் சில எதிர்ப்பு குரல்கள் எழுந்ததால் பேசுவதை நிறுத்துவிட்டு இடையூறு செய்தவர்கள் நேரடியாக மோத மேடைக்கு வருமாறும் சீமான் அழைத்தார்.

    கொடி ஏற்ற எதிர்ப்பதா?

    கொடி ஏற்ற எதிர்ப்பதா?

    இது தொடர்பாக சீமான் அக்கூட்டத்தில் பேசியதாவது: சேரர், சோழர்கள், பாண்டியர்கள் மூவரும் ஒருங்கிணைந்து நின்று போர் செய்திருந்தால் உலகில் அத்தனை நாடுகளும் நம்முடையதாகி இருக்கும். ஆனால் சொந்த ரத்தங்களுக்குள் யுத்தம் நடந்தது. இங்கே நம்மை கொடி ஏற்றக் கூடாது என்கிறார்கள். விஜயகாந்தும், எம்ஜிஆர், கருணாநிதியும், ஜெயலலிதாவும் கொடி ஏற்றும் போது என்ன செய்து கொண்டிருந்தார்களாம்?

    உன்னை அடிக்கலை..

    உன்னை அடிக்கலை..

    இந்த மண்ணின் மகன், மானத் தமிழ் மகன் கட்சிக் கொடி ஏற்றும் போது உங்களுக்கு வலி ஏற்படுவது ஏன்? நான் இங்கே பறையைத்தான் அடித்தேன்.. உன்னை அடிக்கவில்லை. புரியுதா? இந்த சேட்டையை எல்லாம் வேறு எங்கிட்டாவது வச்சுக்குங்க.. நான் கொஞ்சம் முன்னாடி வந்து இங்க உட்கார்ந்திருக்கும் போது, பறை அடிக்காதே- கொடி ஏற்றாதே என சொல்லிட்டு தப்பிச்சுட்டுப் போயிருப்பியா நீ? நீ எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் தப்பிச்சு போயிருவியா?

    2 சீட், 3 சீட், பெட்டி வாங்குறது

    2 சீட், 3 சீட், பெட்டி வாங்குறது

    பறை என்பது பறை அல்ல. என் இனத்தின் எழுச்சிமிகு குறியீடு. இது ஆதித் தமிழ் பறையடா- அதை அடித்து பகைமுகத்தில் அறையடா என்பதுதான் எங்கள் முழக்கம். 2 சீட், 3 சீட்டுக்கு... நீ.. வா மோதுவோம்.. தனிச்சு நிப்போம் வா.. 2024- ல் தனித்து நிற்போம்; 2026-ல் தனித்து நிற்போம். இது உன் கோட்டைன்னா.. ஒட்டுமொத்த தமிழ்நாடும் என் கோட்டை- விளையாட்டு பண்ணாதீங்க.. பேரம் பேசி பேசி பெட்டி வாங்கி நோட்டு வாங்கி சீட்டு வாங்கி கட்சி நடத்துகிறவன் நாங்க இல்லை. இவ்வாறு ஆவேசமாக பேசினார் சீமான்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+