“4 முறை நீதிமன்றப் படி ஏறினால் தான் சீமானுக்கு நிதானம் வரும்”.. விடுவிக்க மறுத்தது சென்னை ஐகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேசவேண்டும்,
தொடர்ந்து 4 முறை நீதிமன்றப் படி ஏறினால் தான் சீமானுக்கு நிதானம் வரும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்து விட்டது.

seeman high court congress

கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி என பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார். அரசியல் தலைவர்கள் குறித்து பேசும்போது நிதானத்துடன் பேசவேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

சீமான் தனிப்பட்ட நபர்களை தூண்டும் விதமாக கருத்துகளைத் தெரிவித்து வருவதாகவும், இதுபோன்ற கருத்துக்களை சீமான் பேசக் கூடாது என அவருக்கு அறிவுரை வழங்கவும் சீமான் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

மேலும் நான்கு முறை நீதிமன்றம் போய் வரட்டும், அப்போதுதான் அவர் என்ன பேசினார் என்பது அவருக்கும் புரியும். அடுத்தவரின் கோபத்தை தூண்டும் விதமாக பேசுவது தான் சீமானின் வழக்கமாக உள்ளது என இந்த வழக்கில் நீதிபதி கருத்தை பதிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+