உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்!
சென்னை: தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ள விஷயமாக, தமிழக அமைச்சரவையின் பதவி மூப்பு (சீனியாரிட்டி) பட்டியல் மாறியுள்ளது. நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட அமைச்சரான செங்கோட்டையன் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், செங்கோட்டையனுக்கு அதில் வருத்தம் இருந்தாலும் அதனை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை என்கின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகு, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இதையடுத்து, கடந்த மாதம் 10-ம் தேதி முதல்வராக விஜய் பதவியேற்றார். அவருடன் சேர்ந்து செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் அமைச்சர்களாகினர்.

அதன் பின்னர் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது 35 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ மூப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை
அந்த பட்டியலில் முதல்வர் விஜய் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் இரண்டாவது இடத்திலும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார். அதன் பின்னரே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரான செங்கோட்டையன் இடம்பெற்றுள்ளார். இதுவே தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அமைச்சரவை சீனியாரிட்டி
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக செயல்பட்டு வரும் மூத்த தலைவர்களில் ஒருவராக செங்கோட்டையன் கருதப்படுகிறார். முன்னாள் ஆட்சிகளில் முக்கிய அமைச்சகங்களை வகித்ததோடு, நிர்வாக அனுபவத்திலும் அவர் முன்னிலையில் உள்ளவர் என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். அத்தகைய சூழலில், அரசியல் அனுபவம் குறைவான பலர் அவருக்கு முன்னதாக மூப்பு பட்டியலில் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அமைச்சரவையில் புதிதாக இடம் பெற்ற சிலருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருவதாக கூறப்படுகிறது.
தவெக தலைமை
இந்த பட்டியலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் 11-வது இடத்திலும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் 12-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு ஆகியோரும் முன்னுரிமை வரிசையில் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் கூட்டணி கட்சிகளுக்கு அரசியல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தவெக தலைமை நினைத்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
மூப்பு பட்டியல்
அமைச்சர்களின் மூப்பு பட்டியல் என்பது வெறும் பெயர் வரிசை அல்ல. சட்டசபையில் அமைச்சர்கள் அமரும் இடம் முதல், அரசு நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் முன்னுரிமை வரை இந்த பட்டியலின் அடிப்படையில் தான் வழங்கப்படும். அதனால் தான் மூப்பு வரிசையில் ஏற்பட்ட இந்த மாற்றம் சாதாரண நிர்வாக நடவடிக்கையாக இல்லாமல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மூப்பு பட்டியல் வெளியான பிறகு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கோட்டையன் அதிருப்தி
அமைச்சரவையில் மிக மூத்த அரசியல்வாதியாக இருந்தும், அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற கருத்தை சிலர் முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து செங்கோட்டையன் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் வெளியாகவில்லை. அவர் அமைதியாகவே இருந்து வருகிறார். அமைச்சரவை அமைப்பில் புதிய தலைமுறைக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் சம மரியாதை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications