Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“செங்கோட்டையனுக்கு பிடிக்கிற மாதிரி பதில் கிடைக்கும்”.. அமைச்சர் பேச்சால் திரும்பிப் பார்த்த தலைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "செங்கோட்டையனுக்கு பிடிக்கிற மாதிரியான பதில், மானிய கோரிக்கையில் வரும்" என இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தில் செங்கோட்டையனின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது.

Assembly aiadmk Sengottaiyan

அதற்கு முன்னதாக இன்று காலை தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார்.

முன்னதாக பட்ஜெட் தாக்கல், வேளாண் பட்ஜெட் தாக்கல் அன்று நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இன்றைய கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து, செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் அ.தி.மு.க மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஈடுபட்டனர்.

பட்ஜெட் மீதான விவாதம் நடத்த இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் பி.ஆர்.சுந்தரம், கோவிந்தராஜலு, குணசீலன் ஆகிய மூன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். மேலும் பி.ஆர்.சுந்தரம், கோவிந்தராஜலு, குணசீலன் ஆகிய மூன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன்பின் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து வினாக்கள் - விடை நேரம் தொடங்கியதும், அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். ஈரோடு முதல் கோபிசெட்டிப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் கோபி நகரம் மிகுந்த நெரிசல் ஏற்படுகிறது. அங்கு ஒரு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்தேன். பணிகள் நடைபெறும் என கடந்த நிதியாண்டில் அமைச்சர் பதில் அளித்தார். ஆனால் தற்போது வரை பணிகள் நடைபெறவில்லை. இந்தப் பணிகளை நிறைவேற்ற அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

செங்கோட்டையனின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "உறுப்பினர் சொல்வது உண்மை தான். கோபிசெட்டிப்பாளையத்தில் நெரிசல் அதிகம் உள்ளது. அங்கு நான்கு வழிச்சாலை என்ற அடிப்படையில் தான் பணிகள் நடைபெற்று வருகிறது. உறுப்பினர் செங்கோட்டையன் கேள்விக்கு அவருக்கு பிடிக்கும் பதிலை மானியக் கோரிக்கையின் மீது தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மைக்காலமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்தச் சூழலில், இன்று சட்டசபையில் செங்கோட்டையன் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு சொன்ன பதிலை அனைவரும் உன்னிப்பாக கவனித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+