நீங்க 'கோபேக் மோடி' கறுப்பு பலூன் விடலாம்?அர்ஜூன் சம்பத்தை மட்டும் கைது செய்வீங்களா? எச்.ராஜா ஆவேசம்
சென்னை: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை நடத்தும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கறுப்புக் கொடி காட்டுவதாக அறிவித்திருந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார். கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் பயணத்தை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. இந்த பாத யாத்திரையை ராகுல் காந்தி நடத்துகிறார்.

ராஜீவ் நினைவிடத்தில் ராகுல்
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும் 2024 லோக்சபா தேர்தலை மையமாக வைத்தும் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் ராகுல் காந்தி இந்த பாதயாத்திரையை மேற்கொள்கிறார். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்த ராகுல் காந்தி இன்று ஸ்ரீபெரும்புதூரில் அவரது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அர்ஜூன் சம்பத்- #GoBackRahul
இந்நிலையில் ராகுல் காந்தியின் தமிழகம் வருகைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், எது நடப்பினும் நாளை தமிழகம் வரும் தமிழின துரோகி ராகுலுக்கு கருப்பு கொடி இந்து மக்கள் காட்டுவது உறுதி என பதிவிட்டிருந்தார். அத்துடன் #GoBackRahul என்ற ஹேஷ்டேக்கையும் அதில் அர்ஜூன் சம்பத் இணைத்திருந்தார்.

திண்டுக்கல்லில் கைது
இதனிடையே கன்னியாகுமரியில் ராகுல் காந்திக்கு கறுப்பு கொடி காட்டுவதற்காக கோவையில் இருந்து நேற்று நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அர்ஜூன் சம்பத் பயணம் மேற்கொண்டார். இந்த தகவல் கிடைத்த போலீசார், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அர்ஜூன் சம்பத்தை கைது செய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டதாக திண்டுக்கல் போலீசார் தெரிவித்தனர்.

எச்.ராஜா கண்டனம்
அர்ஜூன் சம்பத்தை தமிழக போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: எதிர்க்கட்சியாக இருந்த திமுக மாண்புமிகு பிரதமருக்கு எதிராக கோ பேக் மோடி என்று கூறி கருப்பு பலூன் விட்டது.ராஜ்பவன் முன் கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்தது. ஆனால் ராகுல் காந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்ட சென்ற அர்ஜூன் சம்பத் அவர்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications