பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் பாலியல் புகார்.. 3 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு
சென்னை: பெரியகுளம் சட்டசபை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் கதிர்காமு மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் கதிர்காமு மீது பாலியல் பலாத்கார புகாரை அளித்ததன் பேரில் 3 பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கதிர்காமு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எங்களுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருப்பதால், இதுபோன்ற புகார்களை பரப்புகிறார்கள். எந்த புகாராக இருந்தாலும் சட்டப்படி சந்திக்க நான் தயாராக உள்ளேன்.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் இருவரும் எனக்கு எதிராக பொய் புகார்களை பரப்பி வருகிறார்கள். இவ்வாறு கதிர்காமு தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலுடன், ஏப்ரல் 18ம் தேதி பெரியகுளம் உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications