நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் மீண்டும் விசாரணை.. ராம்குமாரை சுற்றிய மர்ம முடிச்சுகள் உடையுமா?
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் தற்கொலை தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருப்பதன் மூலம் மீண்டும் இவ்வழக்கு உயிர் பெற்றுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் சாப்ட்வேர் பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான ப்ளாஷ் செய்திகள் டிவிகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, ஒய்ஜி மகேந்திரன் போன்ற சிலர், பிலால் என்பவர் பெயரைக் குறிப்பிட்டு அவர்தான் கொலையாளி என சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

அடேங்கப்பா யூகங்கள்
எந்த ஒரு கொலை சம்பவத்திலும் இல்லாத வகையில் சுவாதி படுகொலை -ஆணவக் கொலை; லவ் ஜிகாத் என ஏகப்பட்ட யூகங்கள் அடித்து விடப்பட்டிருந்தன. பிலால் தொடங்கி இத்தகைய யூகங்கள் ஏன் கிளம்பின என்கிற வினாக்களுக்கு விடை கிடைக்காத சூழ்நிலையில்தான் அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்தன.

ராம்குமாரும் சுவாதி படுகொலையும்
சுவாதி படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி ராம்குமார் நெல்லையில் பிடிபட்டார்; ராம்குமார் போலீசார் சுற்றி வளைப்பின் போது கழுத்தை அறுத்தை தற்கொலை செய்ய முயன்றார் என பகீர் செய்திகள் வந்தன. இன்னொரு பக்கம், ராம்குமாருக்கும் இந்த கொலைக்குமே தொடர்பே இல்லை என்கிற குரல்களும் வலுத்து வந்தன.

ராம்குமார் தற்கொலை
ஆனால் கைது செய்யப்பட்ட ராம்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இத்துடன் சுவாதி வழக்கின் வேகம் ஒருவித முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில் சிறையில் மின்சார ஒயரைக் கடித்துக் கொண்டு ராம்குமார் தற்கொலையும் செய்து கொண்டார் என அறிவிக்கப்பட்டு வழக்கு முடிந்து போனதாகிவிட்டது.

மீண்டும் விசாரணை- அதிரடி உத்தரவு
இருந்தபோதும் சுவாதி கொலையில் என் மகனுக்கு தொடர்பு இல்லை; வேண்டும் என்றே என் மகனை கொலையில் சிக்க வைத்து சாகடித்துவிட்டனர் என்ற ராம்குமாரின் தாயாரின் குமுறல் ஓயவில்லை. அவர் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டார். தற்போது, ராம்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராம்குமார் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது மனித உரிமைகள் ஆணையம். இந்த உத்தரவால் சுவாதி படுகொலை வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளது. சுவாதி படுகொலை தொடர்பாக விலகாத மர்ம முடிச்சுகள் இனியேனும் வெளிவருமா? உண்மை குற்றவாளி ராம்குமார்தானா? அல்லது சோ கால்ட் பரப்பிவிட்ட பிலால் போன்றவர்கள் உண்மை குற்றவாளிகளா? என்பதெல்லாம் இனி அம்பலத்துக்கு வரும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications