Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் மீண்டும் விசாரணை.. ராம்குமாரை சுற்றிய மர்ம முடிச்சுகள் உடையுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் தற்கொலை தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருப்பதன் மூலம் மீண்டும் இவ்வழக்கு உயிர் பெற்றுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் சாப்ட்வேர் பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான ப்ளாஷ் செய்திகள் டிவிகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, ஒய்ஜி மகேந்திரன் போன்ற சிலர், பிலால் என்பவர் பெயரைக் குறிப்பிட்டு அவர்தான் கொலையாளி என சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

அடேங்கப்பா யூகங்கள்

அடேங்கப்பா யூகங்கள்

எந்த ஒரு கொலை சம்பவத்திலும் இல்லாத வகையில் சுவாதி படுகொலை -ஆணவக் கொலை; லவ் ஜிகாத் என ஏகப்பட்ட யூகங்கள் அடித்து விடப்பட்டிருந்தன. பிலால் தொடங்கி இத்தகைய யூகங்கள் ஏன் கிளம்பின என்கிற வினாக்களுக்கு விடை கிடைக்காத சூழ்நிலையில்தான் அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்தன.

ராம்குமாரும் சுவாதி படுகொலையும்

ராம்குமாரும் சுவாதி படுகொலையும்

சுவாதி படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி ராம்குமார் நெல்லையில் பிடிபட்டார்; ராம்குமார் போலீசார் சுற்றி வளைப்பின் போது கழுத்தை அறுத்தை தற்கொலை செய்ய முயன்றார் என பகீர் செய்திகள் வந்தன. இன்னொரு பக்கம், ராம்குமாருக்கும் இந்த கொலைக்குமே தொடர்பே இல்லை என்கிற குரல்களும் வலுத்து வந்தன.

ராம்குமார் தற்கொலை

ராம்குமார் தற்கொலை

ஆனால் கைது செய்யப்பட்ட ராம்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இத்துடன் சுவாதி வழக்கின் வேகம் ஒருவித முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில் சிறையில் மின்சார ஒயரைக் கடித்துக் கொண்டு ராம்குமார் தற்கொலையும் செய்து கொண்டார் என அறிவிக்கப்பட்டு வழக்கு முடிந்து போனதாகிவிட்டது.

மீண்டும் விசாரணை- அதிரடி உத்தரவு

மீண்டும் விசாரணை- அதிரடி உத்தரவு

இருந்தபோதும் சுவாதி கொலையில் என் மகனுக்கு தொடர்பு இல்லை; வேண்டும் என்றே என் மகனை கொலையில் சிக்க வைத்து சாகடித்துவிட்டனர் என்ற ராம்குமாரின் தாயாரின் குமுறல் ஓயவில்லை. அவர் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டார். தற்போது, ராம்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராம்குமார் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது மனித உரிமைகள் ஆணையம். இந்த உத்தரவால் சுவாதி படுகொலை வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளது. சுவாதி படுகொலை தொடர்பாக விலகாத மர்ம முடிச்சுகள் இனியேனும் வெளிவருமா? உண்மை குற்றவாளி ராம்குமார்தானா? அல்லது சோ கால்ட் பரப்பிவிட்ட பிலால் போன்றவர்கள் உண்மை குற்றவாளிகளா? என்பதெல்லாம் இனி அம்பலத்துக்கு வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+