மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து.. முன்னாள் எம்எல்ஏ அதிமுகவில் இருந்து நீக்கம்
சென்னை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்து போட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள ரூ.2,152 கோடி விடுவிக்கப்படும் என்றும், இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் கூட மும்மொழி கொள்கையை ஏற்கும் போது, தமிழ்நாடு ஏற்பதற்கு என்ன என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, மீண்டும் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு குறித்த விவாதம் எழுந்துள்ளது. திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளும் ஓரணியில் திரண்டு இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களும் நடத்தப்படு வந்தன. இதற்கிடையே மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகவும், இந்தி கற்றுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பாஜக தரப்பில் கூறப்பட்டு வந்தது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தி திணிப்பு குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுகவும் தொடர்ந்து இருமொழிக் கொள்கையே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கையெழுத்து போட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ K.S.விஜயகுமார் (மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், எல்லாபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிகமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications