Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்மார்ட் சிட்டி திட்டமே மழைநீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் - தி.நகர் பொதுமக்கள் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் கனமழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது என்றும் வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    வடியாத மழை நீர்.. Smart City திட்டம் தான் காரணம்.. மக்கள் குற்றச்சாட்டு

    வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முழுக்க விடிய விடிய மழை பெய்தது.

    சென்னையில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை விடாமல் இப்போது வரை பெய்து கொண்டு இருக்கிறது. இரவு முழுக்க மழை பெய்த காரணத்தால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை காரணமாக அதிக வெள்ளம் ஏற்பட்ட, தி நகர், வேளச்சேரி பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    வேளச்சேரி

    வேளச்சேரி

    சென்னையில் வேளச்சேரி, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. . ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் விட்டு விட்டு மழை பெய்தது.

    தியாகராய நகரில்

    தியாகராய நகரில்

    இந்த மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக தியாகராய நகரில் கடந்த கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையில் மழைநீர் இவ்வளவு தேங்க வில்லை. ஆனால் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அனைத்து பகுதிகளையும் நாசமாக்கியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    பாண்டிபஜார்

    பாண்டிபஜார்

    சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் கனமழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது என்றும் வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    1000 வீடுகள் உள்ள இந்த பகுதியில் ஸ்மார்ட் சிட்டி மூலம் மழை நீர் செல்லும் வடிகால் பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மழை நீர் ஆங்காங்கே தேங்கி குளம் போல் உள்ளது. மேலும் இந்தப் பகுதியில் மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அப்பகுதி மக்களே சீரமைத்து வருகின்றனர்.

    திருமலை நகர்

    திருமலை நகர்

    சென்னையில் தியாகராயநகர் மட்டுமல்ல , வேளச்சேரி , தாம்பரம், திருமலை நகர் வட சென்னையின் சில பகுதிகளில் பெரும்பாலான சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க அரசு விரைந்து நடவடிக்கை எ, டுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். விட்டு விட்டு பெய்து வரும் மழைக்கு நடுவே மீட்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+