ஸ்மார்ட் சிட்டி திட்டமே மழைநீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் - தி.நகர் பொதுமக்கள் குற்றச்சாட்டு
சென்னை : சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் கனமழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது என்றும் வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முழுக்க விடிய விடிய மழை பெய்தது.
சென்னையில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை விடாமல் இப்போது வரை பெய்து கொண்டு இருக்கிறது. இரவு முழுக்க மழை பெய்த காரணத்தால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை காரணமாக அதிக வெள்ளம் ஏற்பட்ட, தி நகர், வேளச்சேரி பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வேளச்சேரி
சென்னையில் வேளச்சேரி, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. . ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் விட்டு விட்டு மழை பெய்தது.

தியாகராய நகரில்
இந்த மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக தியாகராய நகரில் கடந்த கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையில் மழைநீர் இவ்வளவு தேங்க வில்லை. ஆனால் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அனைத்து பகுதிகளையும் நாசமாக்கியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாண்டிபஜார்
சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் கனமழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது என்றும் வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
1000 வீடுகள் உள்ள இந்த பகுதியில் ஸ்மார்ட் சிட்டி மூலம் மழை நீர் செல்லும் வடிகால் பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மழை நீர் ஆங்காங்கே தேங்கி குளம் போல் உள்ளது. மேலும் இந்தப் பகுதியில் மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அப்பகுதி மக்களே சீரமைத்து வருகின்றனர்.

திருமலை நகர்
சென்னையில் தியாகராயநகர் மட்டுமல்ல , வேளச்சேரி , தாம்பரம், திருமலை நகர் வட சென்னையின் சில பகுதிகளில் பெரும்பாலான சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க அரசு விரைந்து நடவடிக்கை எ, டுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். விட்டு விட்டு பெய்து வரும் மழைக்கு நடுவே மீட்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications