சோப், பிஸ்கட் எடை குறைவு.. ஆனால் அதேவிலை... வலி தாங்க சக்தி கொடு...ஆனந்த் ஸ்ரீனிவாசன் வருத்தம்
சென்னை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில் சோப், பிஸ்கட்டில் விலையை உயர்த்தாமல் எடையை குறைத்து அதே விலைக்கு விக்கிறாங்க. இந்த வலியை தாங்க சக்தி கொடு என பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன். பொருளாதார நிபுணரான இவர் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
மேலும் பொருளாதாரம், முதலீடுகள் குறித்து தொடர்ந்து பேசி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

பொருளாதார நெருக்கடி
மேலும் இந்தியாவின் நிதிநிலைமை, பணவீக்கம் மோசமான நிலையில் இருப்பதாக அவர் கூறி வருகிறார். சமீபத்தில் கூட இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை குறிப்பிட்டு இந்தியாவுக்கு எச்சரிக்கை செய்தார். அதாவது மத உணர்வுகளை தூண்டும் இலங்கை அரசின் கொள்கை தான் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து இருந்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு அவர் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

அதிகரிக்கும் விலையேற்றம்
இந்நிலையில் தற்போது இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதன்மூலம் ஓட்டல் உணவு, டீ, காபியின் விலைகள் அதிகரித்துள்ளன. வாகனங்களின் வாடகை கட்டணங்களும் சில இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. சில இடங்களில் விரைவில் விலை உயர்வு அமலுக்கு வர உள்ளது. மேலும் ஆட்டோ, வாடகை கார், ஸ்கூட்டர்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

எடைகளை குறைப்பதாக புகார்
இதற்கிடையே தான் பெட்ரோல், டீசல், மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை சில நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் தாங்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு பதில் அதன் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

சோப், பிஸ்கட் எடை குறைவு
சோப் ஒன்றின் பெயரை குறிப்பிட்டு ரூ.10க்கு விற்ற 150 கிராம் எடை கொண்ட சோப் தற்போது 130 கிராமாக எடை குறைக்கப்பட்டு அதே விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛சோப்பின் 150 கிராம் விலை 10 ரூபாயாக இருந்தது. தற்போது 130 கிராம் சோப் 10 ரூபாய் என ஆகிவிட்டது. விலையை கூட்டுவதற்க பதில் எடையை குறைக்குறாங்க. பிஸ்கட் பாக்கெட்டும் அப்படித்தான். ஆனா சக்தி காந்த தாஸ் வேற மாதிரி சொல்றாரே! வலியை தாங்குவதற்கு சக்தி கொடு'' என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் மத்திய அரசை மறைமுகமாக தாக்கி பேசிய ஆனந்த் ஸ்ரீனிவாஸ் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸை நேரடியாக விமர்சனம் செய்துள்ளார்.
-
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications