தமிழகத்தின் பழமையான கோவில்கள் இனி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்.. மத்திய அரசு புது திட்டம்!
தமிழகத்தில் பழமையான கோவில்கள் சிலவற்றை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு வருகிறது.
சென்னை: தமிழகத்தில் பழமையான கோவில்கள் சிலவற்றை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
இந்தியாவில் இருக்கும் பழைய கட்டிடங்கள், புராதான சின்னங்கள் ஆகியவற்றை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது வழக்கம். அந்த பகுதிகளை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. தமிழகத்தில் இப்படி பல பகுதிகள் உள்ளது .
தமிழகத்தில் மொத்தம் தொல்லியல் துறை வசம் 100+ இடங்கள் உள்ளது. நிறைய புராதன கட்டிடங்கள், பழங்கால ஆங்கிலேயர் கால இடங்கள், நினைவுச் சின்னங்கள் இருக்கிறது.

என்ன சின்னம்
இந்த நிலையில் நாடு முழுக்க பல்வேறு புராதான சின்னங்களை தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய மத்திய அரசு சார்பாக 3,691 புராதனச் சின்னங்கள் தொல்லியல் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக தாஜ்மஹால், குதுப்மினார் போன்ற வரலாறு சிறப்பு மிக்க கட்டிடங்கள் இந்த பட்டியலில் உள்ளது. சென்னை மாமல்லபுரமும் இதன் கீழ்தான் வருகிறது.

உத்தர பிரதேசம் எப்படி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 745 இடங்கள் இந்திய தொல்லியல் அமைப்பின் கீழ் உள்ளன. இந்தியாவில் சில கோவில்கள் தொல்லியல் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோவில்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக புதிய திட்டம் மூலம் இந்த கோவில்களை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவுதான் கேள்விகளை எழுப்பி உள்ளது.

இந்துக்கள்
இதனால் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் கோவில்கள் பல மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல வாய்ப்புள்ளது. பழமையான கோவில்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு செல்லும். நாடு முழுக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுதான் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலர் இந்த முடிவை எதிர்க்க தொடங்கி உள்ளனர்.

பட்டேல்
கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இந்த திட்டம் எப்போது செயலுக்கு வரும் என்று விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் எந்த கோவில்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் என்று வரையறை இன்னும் விதிக்கப்படவில்லை. அதே சமயம் இன்னொரு பக்கம் மத்திய தொல்லியல் துறை சில முக்கியமான இடங்களை மாநில தொல்லியல் துறைக்கு கொடுக்க வாய்ப்புள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications