அக்டோபர் 21ல் தீபாவளி... நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு..தெற்கு ரயில்வே அறிவிப்பின் முழுவிபரம்
சென்னை: அக்டோபர் மாதம் 21ம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) துவங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பல பண்டிகைகளை வெளியூரில் வசிக்கும் மக்கள் திரளாக சொந்த ஊர் சென்று செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும்.
குறிப்பாக சென்னை அதனை சுற்றிய பகுதிகள் மற்றும் கோவை உள்பட பல நகரங்களில் இருந்து மக்கள் தங்களின் சொந்த கிராமங்களை நோக்கி படையெடுப்பதால் சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றனர்.

அக்டோபர் 21ல் தீபாவளி
கட்டணம் குறைவால் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். இதனால் ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போதும் முன்கூட்டியே ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த முறை தீபாவளி திங்கட்கிழமை வர உள்ளது. இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி அக்டோபர் மாதம் 21ம் தேதியே ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

நாளை முதல் முன்பதிவு
இதனால் பொதுமக்கள் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ரயிலில் முன்பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே அதாவது நாளை (23-ந் தேதி) முதல் ரெயில் முன்பதிவு சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

எந்தெந்த தேதிகளில் முன்பதிவு
அதன்படி அக்டோபர் 21ல் ரயில் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் நாளையும்(வியாழக்கிழமை), அக்டோபர் 22ல் பயணிக்க விரும்புவோர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை), அக்டோபர் 23ல் பயணம் செய்ய விரும்புபவர்கள் ஜூன் 25ம் தேதியும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். வருகிற 25-ந் தேதியும் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

திட்டமிடல் அவசியம்
வழக்கமாக தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களின் டிக்கெட் முன்பதிவு துவங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடும். இதனால் பயணிகள் ரயில் கால அட்டவணைப்படி திட்டமிட்டு உரிய இண்டர்நெட் வசதி உடைய இடத்தில் இருந்து பயணிகள் முன்பதிவு செய்து பயன்பெறுவது அவசியாகும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications