Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் மாநாட்டுக்கு அத்தனை கேள்விகள் கேட்குறீங்களே? மெரினாவில் என்ன செய்திருக்கீங்க? சவுமியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் இறந்ததற்கு காரணம் என்ன என்பதை சவுமியா அன்புமணி விளக்கியுள்ளார்.

இதுகுறித்து சவுமியா அன்புமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: நேற்று இந்திய விமான படை நடத்திய சாகச நிகழ்ச்சி அருமையான நிகழ்ச்சி. நாங்களும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் பார்த்து வீடியோ எடுத்தோம். விமான படை சாகசம் என்பது நமக்கு பெருமையான விஷயம்.

chennai air show 2024 iaf airshow 2024 indian air force 2024


விமான சாகசத்தை பார்க்க மக்களும் ஆர்வமாக வந்திருந்தார்கள். பெரிய சாதனையே படைக்கப்பட்டது. இது எவ்வளவு பெரிய நிகழ்வு? இத்தனை லட்சம் பேர் இந்த சாகசத்தை பார்க்கத்தான் கூடினார்கள். இதை பார்க்க சென்னை, சுற்றியுள்ள பகுதிகள், வெளி மாவட்டங்களில் இருந்து கூட வந்திருந்தார்கள்.

நேற்றைய தினம் 32 டிகிரி வெயில் இருந்தது. இந்த நிகழ்வுக்கு வந்த 4, 5 பேர் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஏனென்றால் அத்தனை வெயில் இருந்தது. இந்த பலி எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு காரணம் சென்னைவாசிகள்தான் என நான் நினைக்கிறேன். அவர்கள்தான் தண்ணீர், தொப்பி, குடை, உணவு, நொறுக்குத் தீனி என தயார் நிலையில் வந்துள்ளார்கள்.

அந்த தயார் நிலையில் அவர்கள் வராமல் இருந்திருந்தால் இன்னும் நிறைய பேர் இறந்திருப்பார்கள். நேற்று ஈரப்பதமும் 61 சதவீதம் இருந்துள்ளது. ஈரப்பதம் அதிகமானால் உடலில் இருந்து வரும் வியர்வை ஆவியாக வேண்டும். அப்படி ஆனால்தான் உடலில் உள்ள வெப்பநிலை குறையும்.

ஈரப்பதம் அதிகமாகி உடலில் இருந்து வியர்வை ஆவியாகாமல் வெளியே வெப்பமும் அதிகமாக இருந்தது. அதிலும் 32 டிகிரி என்பது மெரினா மணலில் 42 டிகிரியாக தெரிந்திருக்கும். உடல் வெப்பநிலையும் குறையாததால்தான் அத்தனை பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் , பாதுகாப்பு வசதியெல்லாம் செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் போக்குவரத்து ஏற்பாடுகள் சரியில்லை. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கே சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த போட்டியில் 15 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அப்படியிருக்கும் போது போக்குவரத்து வசதிகளை செய்திருக்க வேண்டும்.

இதை அவர்கள் இலவசமாக பார்க்க வருகிறார்கள். அப்படியிருக்கும் போது போக்குவரத்தை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் எதையும் செய்யவில்லை. தண்ணீர், நிழற்குடைகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர். 15 லட்சம் பேர் வரும் இடத்தில் 200 பேருக்கு ஒரு போலீஸ் என போட்டால் எப்படி?

ஒரு அரசியல் மாநாட்டிற்கு காவல் துறையில் அனுமதி கேட்டால் எங்களிடம் போலீஸார் என்னென்ன கேட்பார்கள் தெரியுமா? பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளனவா, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்றெல்லாம் கேள்விகள் கேட்பார்கள். விமான சாகசத்திற்கு சென்னையை சுற்றியுள்ளவர்கள் மட்டும்தான் வந்தார்கள்.

ஆனால் அரசியல் கட்சி மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் வருவார்கள். ஆனாலும் ஒரு உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படக் கூடாது என எண்ணி அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வரை அத்தனை முன்னேற்பாடுகளை செய்வோம். இவ்வாற சவுமியா கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+