திரும்பிய சுயநினைவு.. பேப்பரில் எஸ்பிபி எழுதிய அந்த 3 வார்த்தைகள்.. எவ்வளவு அன்பு.. மீண்டு வருவார்!
சென்னை: கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சுயநினைவுடன் இருக்கிறார். மருத்துவர்கள், நர்ஸ்கள், மக்கள் என்று எல்லோருக்காகவும் இவர் மூன்று வார்த்தைகளை தனது கைப்பட நேற்று எழுதி உள்ளார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் தமிழகமே பிரார்த்தனை செய்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி மொத்த இந்திய திரையுலகமே இவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 5ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாற்றம் ஏற்பட்டது
அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் அவ்வப்போது முன்னேறி வந்தது. அதே சமயம் திடீர் என்று அவரின் உடல்நிலை நலிவடைந்தது. உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறி வந்தது. இதனால் தொடர்ந்து ஐசியூவில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார்.

சீரான உடல்நிலை
கடந்த ஒரு வாரமாக அவரின் உடல்நிலை சீராக உள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி உடல் கொஞ்சம் முன்னேறிய நிலையில் அவருக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. 95% சுயநினைவுடன் அவர் தற்போது சீரான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

சொல்ல வருகிறார்
தற்போது சுயநினைவுடன் இருக்கும் எஸ்.பி.பி பேனா மூலம் சில விஷயங்களை சொல்ல வருகிறார். இதற்காக அவரிடம் நேற்று பேனா, பேப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ''லவ் யூ ஆல்'' என்று எஸ்.பி.பி எழுதி இருக்கிறார். லேசான கிறுக்கலுடன், தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மருத்துவர்கள், நர்ஸ்கள், தனக்காக பிரார்த்தனை செய்யும் மக்கள் என்று எல்லோருக்காகவும் இந்த மூன்று வார்த்தைகளை தனது கைப்பட எழுதி உள்ளார்.

பாடல் கேட்டார்
இவரின் இந்த எழுத்து குறிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. ப்பா எவ்வளவு அன்பு இவருக்கு என்று எல்லோரும் இவரை பாராட்டி வருகிறார்கள். தற்போது எஸ்.பி.பி கொஞ்சம் கொஞ்சமாக பாடல் கேட்க தொடங்கி உள்ளார். தனக்கு பிடித்த பாடல்களை மொபைலில் அருகில் வைத்தால் அதை கேட்கிறார். அவரின் உடல் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் விரைவில் அவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கை பிறந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications