எல்லை தாண்டி மீன்பிடிப்பு.. தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Subscribe to Oneindia Tamil
சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.
தமிழக்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், காரைக்காலில் இருந்து 11 மீனவர்கள் வியாழக்கிழமை இரவில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நெடுந்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications