தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரியும் மாநிலங்களுக்கான நிதி பகிர்வை பட்ஜெட்டில் உயர்த்தாத மத்திய அரசு!
சென்னை: மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41 சதவீதமாகவே தொடரும் என்றும் அந்த வகையில் மாநிலங்களுக்கு ரூ 1.4 லட்சம் கோடி விடுவிக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

2026- 2027 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில் 3 முக்கிய காரியங்களை மையமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
தனது உரையில் புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41 சதவீதமாகவே தொடரும் என்றும் அந்த வகையில் மாநிலங்களுக்கு ரூ 1.4 லட்சம் கோடி விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் நடந்த தமிழகத்திற்கான நிதிப் பகிர்வு தொடர்பாக நிதி குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், முக்கிய திட்டங்களை தீட்டி அதனை நிறைவேற்றுவது என்பது மாநில அரசின் கையில்தான் உள்ளது.
வரி பகிர்வு முறையாக வழங்காத காரணத்தால் மாநிலங்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. கூட்டாட்சி தத்துவம் மூலம் மாநிலங்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன.
சுகாதாரம், கல்வி, வேளாண்மை போன்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. போதிய அளவு நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் தமிழகத்தின் நிதிநிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.
வரி பகிர்வு அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைந்த அளவு நிதி வழங்கி வருகிறது. 41 சதவீதம் நிதி பகிர்வு வழங்க வேண்டும் என்றாலும் தமிழகத்திற்கு 33.16சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழகத்திற்கான வரி பகிர்வு என்பது தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. எனவே மாநிலங்களுக்கான நிதி பகிர்வை 50 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். கடந்த 45 ஆண்டுகளாக உள்ள வரி பகிர்வு முறையில் மாநிலங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதால் 50 சதவீதம் வரி பகிர்வை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அது போல் இன்றைய தினம் காலையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டியவை என்பது குறித்த சமூகவலைதள பதிவில் முதல்வர் ஸ்டாலின் 50 சதவீத வரி பகிர்வு குறித்து நினைவூட்டியும் தற்போதைய பட்ஜெட்டில் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications