வறுமையால் தவித்த சூடான் திருடன்.. கைகாசு போட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பிய சென்னை போலீஸ்
சென்னை: வறுமை காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்த சூடான் இளைஞர், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கைகாசு போட்டு சொந்த நாட்டுகே அவரை அனுப்பி வைத்துள்ளது சென்னை போலீஸ்.
ஆப்பிரிக்காவின் சூடான் நாட்டைச் சேர்ந்தவர் முகமது அல் முஸ்தபா. 26 வயதாகும் இவர் கடந்த 2016-ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பார்ம். படிப்பதற்காக இந்தியா வந்தார்.
ஒரு வருடம் படிப்பை முடித்து விட்டு கடந்த 2017-ம் ஆண்டே முஸ்தபா சொந்த நாட்டிற்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஒரு பாடத்தில் பெயில் ஆகி அரியர் வைத்திருந்தால் சொந்த நாட்டுக்கு செல்லவில்லை.

முஸ்தபா கைது
கையிலும் போதிய பணம் இல்லாமல் வறுமையில் தவித்த முஸ்தபா நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்து கூலி வேலை செய்துள்ளார். செலவுக்கு பணம் போதிய அளவு இல்லாததால் பணத்திற்காக சிறு, சிறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே கையில் அரிவாளுடன் இருந்த முகமது அல் முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர்.

வறுமையால் தவிப்பு
வெளிநாட்டு இளைஞர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் கவனத்திற்கு மெரினா போலீசார் கொண்டு சென்றனர். இதையடுத்து சூடான் நாட்டு இளைஞர் முஸ்தாவிடம் கமிஷனர் பேசினார். அப்போது அவர் வறுமை காரணமாக சொந்த நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாகவும், தான் நாடு திரும்ப உதவும்படியும் கமிஷனரிடம் கேட்டுள்ளார்.

சூடான் திருப்ப ஏற்பாடு
இதையடுத்து, கமிஷனரின் ஆலோசனைபடி, சூடான் வாலிபர் நாடு திரும்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மெரினா இன்ஸ்பெக்டர் தேவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் இந்த பணியினை செய்தனர். போலீஸ் வழக்கு, விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றில் இருந்த நடைமுறை சிக்கல்களை போலீசார் களைந்தனர்,

சூடான் சென்ற முஸ்தா
தனிநபர் ஒருவர் உதவியுடன் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள விமான டிக்கெட் எடுத்து கொடுத்து முஸ்தபாவை நேற்று மதியம் பத்திரமாக சொந்த நாட்டிற்கு சென்னை போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தபடி சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications