தமாகா வேட்பாளர் பட்டியல்! ஈரோடு - விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர்- வேணுகோபால்! தூத்துக்குடிக்கு யார்?
சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறித்து அதன் வேட்பாளர்கள் குறித்தும் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.
பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். எந்தெந்த தொகுதிகள் என்பதை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு அதிமுக, திமுக, பாஜக ஆகியவை தனித்தனியே கூட்டணி அமைத்தும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது. இதனால் இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. இவற்றிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றாலும் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவேன் என அக்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
அது போல் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், அமமுக, பாமக உள்ளிட்டவை கூட்டணி அமைத்திருந்தன. ஓபிஎஸ் அணியும் கூட்டணி அமைப்பதாக சொன்ன நிலையில் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிடுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான கூட்டணி பங்கீடு நிறைவடைந்ததாகவும் தமிழக பாஜக 20 இடங்களில் போட்டியிடுவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அது போல் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது எந்தெந்த தொகுதிகள் என்பதை ஜி.கே. வாசனே அறிவிப்பார் என்றார்.
இந்த நிலையில் ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என தகவல்கள் வெளியாகியிருந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு டெல்டா பகுதிகளில் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் ஈரோடு , மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய 3 தொகுதிகளை ஜி.கே.வாசன் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் அதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் ஜி.கே.வாசன் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தமாகா ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றும் அதில் ஈரோடு தொகுதிக்கு விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு வேணுகோபாலும் போட்டியிடுவார்கள் என்றும் அறிவித்துள்ளார். மீதமுள்ள தூத்துக்குடி தொகுதிக்கு வேட்பாளர் பிறகு அறிவிக்கப்படுவார் என்றார்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications