வக்கீலாக ஆசையா? அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை..ஆன்லைனில் விண்ணப்பிங்க
சென்னை: அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர மே 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யுடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலை.யின் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிலும் சேர மே 15 முதல் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தற்போது ஐந்தாண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மட்டுமே வரவேற்கப்படுவதாகவும் மூன்றாண்டு கால சட்டப்படிப்பு மற்றும் சட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பொது 10 மற்றும் 12 மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, முகவரி ஆதாரம், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களை கொண்டு முறையாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பப் படிவம் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ளது மற்றும் TNDALU சேர்க்கைக்கான கடைசி தேதி 31 மே 2023 ஆகும். ஒரு மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பித்தால், இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். எந்த சூழ்நிலையிலும் படிவத்தை திருத்த முடியாது. உறுதிப்படுத்தல் பக்கத்தின் அச்சுப்பொறியை எடுக்க மறக்காதீர்கள். விண்ணப்பத்தின் விலை ரூ.500 மற்றும் SC(A)/SC(O) & ST மாணவர்களுக்கு ரூ.250/- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications