Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது..' ஆசிய செஸ் கூட்டமைப்பு வழங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதை பாராட்டும் வகையில், ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது' விருது வழங்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காலங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை தமிழ்நாடு நடத்தியது.

Tamil Nadu CM M.K. Stalin has been awarded Man of the Year Award by the Asian Chess Federation

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் மொத்தம் 187 நாடுகளின் 1,400 வீரர்கள் பங்கேற்றனர். ஏறத்தாழ இரண்டு வார காலமாக இந்த போட்டிகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கத்தையும், அர்மேனியா அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது. இந்தியாவின் 2-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் வென்றது. அதேபோல, பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கம் வென்றது. , ஜார்ஜியா அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்தியாவின் 1-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது.

Tamil Nadu CM M.K. Stalin has been awarded Man of the Year Award by the Asian Chess Federation

தங்கப்பதக்கம் வென்ற அணிகளுக்கு கூடுதலாக கோப்பையும் வழங்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. பங்கேற்க வந்த வெளிநாட்டு வீரர்கள் கூட தமிழகத்தின் விருந்தோம்பலை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது' வழங்கப்பட்டுள்ளது.

ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது' விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் விருதை வழங்கினார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+