தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது..' ஆசிய செஸ் கூட்டமைப்பு வழங்கியது
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதை பாராட்டும் வகையில், ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது' விருது வழங்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காலங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை தமிழ்நாடு நடத்தியது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் மொத்தம் 187 நாடுகளின் 1,400 வீரர்கள் பங்கேற்றனர். ஏறத்தாழ இரண்டு வார காலமாக இந்த போட்டிகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.
ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கத்தையும், அர்மேனியா அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது. இந்தியாவின் 2-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் வென்றது. அதேபோல, பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கம் வென்றது. , ஜார்ஜியா அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்தியாவின் 1-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது.

தங்கப்பதக்கம் வென்ற அணிகளுக்கு கூடுதலாக கோப்பையும் வழங்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. பங்கேற்க வந்த வெளிநாட்டு வீரர்கள் கூட தமிழகத்தின் விருந்தோம்பலை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது' வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது' விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் விருதை வழங்கினார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
-
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications