முதல்வர் நிவாரண நிதிக்கு குவிந்த ரூ.. 399.93 கோடி... அள்ளிக் கொடுத்த வள்ளல்கள்!!
சென்னை: தமிழகத்தில், 2020 அக்டோபர் 7ஆம் தேதி வரை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை ரூ.399.93 கோடி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு கொரோனா தொற்று காரணாமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான செலவை நன்கொடை மூலமும், அரசின் வருவாய் மூலமும் சரிகட்டி வருகிறது. முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பலரும் நன்கொடை வழங்கி வந்துள்ளனர். இவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த நிறுவன ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 2020, ஜூலை 21ஆம் தேதி வரை மொத்தம் 394.14 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஜூலை 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வழங்கியவர்களின் விவரங்கள்:
* கலைஞர் நினைவு இண்டர்நேஷனல் வர்ச்சுவல் மாராத்தான் 2020, 23 லட்சத்து 41 ஆயிரத்து 726 ரூபாய்.
* நீதித்துறை பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் 49 லட்சத்து 56 ஆயிரத்து 851 ரூபாய்.
* இராம. ராமநாதன், சேர்மன், கும்பகோணம் மீயூட்சுவல் பெனிஃபிட் ஃபண்ட் நிதி லிமிடெட், கும்பகோணம் 25 லட்சம் ரூபாய்.
* தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் 1 கோடி ரூபாய்.
* கேஏஎல்எஸ் குருப் ஆப் கம்பெனிஸ், சென்னை 1 கோடி ரூபாய்.
* ஹிந்துஸ்தான் பேங்க் லிமிடட் 95 லட்சம் ரூபாய்.
* டெனோவா இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை 10 லட்சம் ரூபாய்.
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை மொத்தமாக 399.93 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications