சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாச்சு.. தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று.. சென்னை மீண்டும் டாப்.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கொரோனா குறைந்து வந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. சென்னையிலும் கொரோனா அதிகரித்து மீண்டும் முதலிடம் பிடித்து இருக்கிறது. தினசரி பாதிப்பில் கோவை இரண்டாம் இடத்துக்கு சென்றுள்ளது.

'ஷாக்..' ஒரு மாதத்திற்கு பின்னர்.. தலைநகர் சென்னையில் மீண்டும் 200ஐ கடந்த கொரோனா.. என்ன காரணம்?'ஷாக்..' ஒரு மாதத்திற்கு பின்னர்.. தலைநகர் சென்னையில் மீண்டும் 200ஐ கடந்த கொரோனா.. என்ன காரணம்?

கொரோனா அதிவேகம்

கொரோனா அதிவேகம்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா குறைந்து வந்த நிலையில் இன்று அதிவேகமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட மிக அதிகமாகும்.

உயிரிழப்பும் அதிகரிப்பு

உயிரிழப்பும் அதிகரிப்பு

கொரோனா மொத்த பாதிப்பு 26,38,668 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். கோவையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாகப்பட்டினத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருப்பூரில் தலா 2 பேரும் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,246 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,542 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,86,786 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து குறைவாக இருக்கிறது.

 சென்னை மீண்டும் அதிகம்

சென்னை மீண்டும் அதிகம்

1,658 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,50,226 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,37,77,222 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 226 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் கோவையை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதேபோல் உயிரிழப்பிலும் முதலிடத்தில் உள்ளது. கோவையில் கடந்த 2 நாட்களாக குறைந்த தொற்று இன்று சற்று அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர் ஆறுதல்

தஞ்சாவூர் ஆறுதல்

செங்கல்பட்டில் 126 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 44 பேருக்கும், மதுரையில் 22 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 31பேருக்கும், திருவள்ளூரில் 67 பேருக்கும், திருச்சியில் 53 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 88 பேருக்கும், விருதுநகரில் 12 பேருக்கும், ஈரோட்டில் 130 பேருக்கும், சேலத்தில் 62 பேருக்கும், நாமக்கல்லில் 51 பேருக்கும், தஞ்சாவூரில் 72 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் சதம்

4 மாவட்டங்களில் சதம்

சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டமான செங்கல்பட்டில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் கொரோனா வழிபாடு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால்தான் சென்னையில் கொரோனா தொற்றை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

English summary
1,658 people has been confirmed covid 19 in Tamil Nadu Corona Cases Today. Another 29 people were killed in the corona. In Tamil Nadu, corona has been declining for the last 3 days and today the incidence of corona has increased rapidly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X