சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த 20 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா.. தமிழகத்தில் 800க்கு கீழ் சரிந்த தினசரி பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் நிலையில், இன்று மொத்தம் 20 மாவட்டங்களில் 10க்கும் குறைவான நபர்களுக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே மாத இறுதியில் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் வரும் நவ. 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகளாலும் பண்டிகை காலத்தாலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என முதலில் அஞ்சப்பட்டது. இருப்பினும் தீவிர கொரோனா வேக்சின் பணிகளால் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.

'இதுதான் இந்தியா'.. முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்காக 5 குருத்வாராக்களை வழங்கிய சீக்கியர்கள்.. செம! 'இதுதான் இந்தியா'.. முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்காக 5 குருத்வாராக்களை வழங்கிய சீக்கியர்கள்.. செம!

 தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 1.01 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 775 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 27,17,978 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதம் 0.8%ஆகவே தொடர்கிறது.

 கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 12 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 36,336 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகச் சென்னையில் 3 பேரும் திருவாரூரில் 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

மாநிலம் முழுவதும் நேற்று 9,211 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 9,078ஆக மேலும் குறைந்துள்ளது. இன்றைய தினம் மாநிலத்தில் 896 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் மொத்தம் 26,72,564 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

 மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

அதிகபட்சமாகச் சென்னையில் 126 பேருக்கும் கோவையில் 112 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல அரியலூர் கடலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 10க்கும் குறைவான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாகத் தேனி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டில் சென்னை, கோவைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Corona cases contiune fall in tamilnadu. Tamilnadu Corona cases latest updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X