தமிழகத்தின் கடனை இரட்டிப்பாக்கிய திமுக! விமர்சித்த காங்கிரஸ்! சப்போர்ட்டுக்கு வந்த அண்ணாமலை
சென்னை: தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைவிட தமிழகத்தின் கடன் நிலைமை மோசமாகியுள்ளது என காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறியிருந்த கருத்தையும் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: பொய் சொல்வதில் கோபாலபுரம் குடும்பம் முனைவர் பட்டம் பெற்றிருப்பதாகக் கடுமையாகச் சாடினார். திமுக ஆட்சிக்கு வந்த வெறும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது மாநிலத்தின் நிதிநிலை வரலாற்றில் ஒரு பெரும் சறுக்கலாகப் பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறைகளை மறைப்பதற்கும், மிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக் கதைகளை முன்னிறுத்துவதற்கும் கடன்களை வசதியாகப் பயன்படுத்தியதாக திமுக மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிதி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.
இருப்பினும், இந்த விமர்சனங்களுக்கு அப்பால், திமுகவிற்கும் காங்கிரசுக்கும் இடையே உண்மையில் என்ன நடக்கிறது என்ற பெரிய கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இரு கட்சிகளிடையேயான உறவில் சில விரிசல்கள் உருவாக ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சகாப்தத்தில் நிலவிய மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் மீண்டும் தலைதூக்குவது போல் தெரிகிறது. இதனால் தேசிய அளவில் கூட்டணிக்குள் இருக்கும் பிளவுகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
அது போல் மற்றொரு ட்வீட்டில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: கடந்த 2013 ஆம் ஆண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற சுமார் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு, இன்று வரை பணி வழங்கப்படவில்லை. இது குறித்துப் பல முறை அவர்கள் கோரிக்கை வைத்தும், அறவழிப் போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. தனது 2021 தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண் 177 ல், இவர்களுக்குப் பணி வழங்குவோம் என்று பொய் கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துரோகம் செய்து வருகிறது. இது வரை, 99 போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பெரும் ஏமாற்றத்திலும், விரக்தியிலும் உள்ள இளைஞர்கள், இன்று 100 ஆவது முறையாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
தகுதித் தேர்வுக்குப் பின்னரும் மற்றொரு போட்டித் தேர்வு நடத்தும் அரசாணை 149ஐக் கைவிட்டு, 2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், அவர்கள் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்டு எங்கள் ஆதரவை வெளிப்படுத்தினோம். தொடர்ந்து தமிழக பாஜக, அவர்கள் கோரிக்கைகளுக்குத் துணை நிற்கும்.
போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்ற புதிதாக ஒரு தேர்தல் அறிக்கை குழு அமைப்பதை விட்டு விட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் திரு @mkstalin நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக, 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, முதலமைச்சர் திரு @mkstalin அவர்களையும் திமுக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு












Click it and Unblock the Notifications