தமிழ்நாடு தேர்தல்.. 10 கிமீ.. வேறு வேறு ரூட்டில் போன விஜய் - த்ரிஷா.. தனி தனியாக வாக்களிப்பு.. ஏன்?
சென்னை: தமிழ்நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வரும் நிலையில், தற்போதைய அரசியல் களத்தின் முக்கிய நட்சத்திரமான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் முன்னணி நடிகை த்ரிஷா ஆகியோர் தனித்தனியாகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
நீலாங்கரையில் வாக்களித்த விஜய் - த்ரிஷா எங்கே?
தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி, இந்தத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் விஜய் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்த விஜய், வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். முன்னதாக, சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாகக் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை எழுப்பியிருந்தது. இதனால் இன்று அவர்கள் இருவரும் ஒன்றாக வந்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அபிராமபுரத்தில் த்ரிஷா
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருவரும் தனித்தனி பகுதிகளில் வாக்களித்தனர். நடிகை த்ரிஷா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். விஜய் நீலாங்கரையிலும், த்ரிஷா ஆழ்வார்பேட்டையில் வாக்களிக்க வேண்டியிருந்ததால், இரு இடங்களுக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இதன்காரணமாகவே இருவரும் தனித்தனியாகத் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் ஆர்வம்
நீலாங்கரையில் விஜய் வாக்களிக்க வந்தபோது, அவரது ஆதரவாளர்களும் ரசிகர்களும் உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினர். இந்த பரபரப்புக்கு பிறகு விஜய், வாக்குச் சாவடிக்குள் சென்றார். அப்போது பக்கவாட்டில் ஒரு செல்போன் இருப்பதை விஜய் பார்த்தார். உடனே போய் அதை கீழே குனிந்து எடுத்து, "இது யாருடைய போன் பா.. " என கேட்டதும் அங்கிருந்தவர், "அண்ணே என்னோடதுதான்" என சொன்னதும் அவரிடம் போனை விஜய் ஒப்படைத்தார். கடந்த சில தினங்களாக விஜய் பொதுமக்களுடன் பழகி வருகிறார். அண்மையில் பிரச்சாரத்தின் போது மணமக்களை பிரச்சார வாகனத்தில் ஏற்றி அவர்களை வாழ்த்தினார்.
அதேபோல் ஆழ்வார்பேட்டையில் த்ரிஷாவைச் சந்திக்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். அண்மைக் காலமாக விஜய் - த்ரிஷா இருவர் குறித்தான செய்திகள் சினிமா வட்டாரத்தைத் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகி வரும் நிலையில், இன்றைய வாக்குப்பதிவு நிகழ்வு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் ஒரு திருமண விழாவில் இருவரும் ஒரே காரில் வந்து இறங்கியது பெரிய அளவில் செய்தியானது. இருப்பினும், நாட்டின் மிக முக்கியமான தேர்தல் நாளில், இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் சென்று முறையாக வாக்களித்துள்ளனர். அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு, வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை உணர்த்தும் வகையில் இவர்களது செயல் அமைந்திருந்தது.
தமிழகம் முழுவதும் இன்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில், மே 4-ம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை நோக்கி ஒட்டுமொத்த மாநிலமும் ஆவலுடன் காத்திருக்கிறது













Click it and Unblock the Notifications