Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கார்டு.. தமிழக அரசு அளித்த ஒப்புதல் தெரியுமா? 22,294 பேரை விசாரிக்க போறாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பம் பெறப்பட்டதால் கடந்த ஜுலை மாதத்தில் ரேஷன் கார்டு குறைவான நபர்களுக்கே கிடைக்க உள்ளது. கடந்த மாதம் விண்ணப்பித்தவர்களில் புதிதாக 1576 ரேஷன் கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாம். இதுதவிர விசாரணையில் 22294 விண்ணப்பங்கள் இருக்கின்றனவாம்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் திருமணம் ஆன உடன் செய்யும் முதல் வேலை தனி ரேஷன் கார்டு வாங்குவது தான். தனி ரேஷன் கார்டு இருந்தால் தான், ரேஷன் கடைகளில் விலை இல்லாமல் வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் சர்க்கரை, கோதுமை, பருப்பு, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெற முடியும். ஒரு ஏழைக் குடும்பத்திற்கு கண்டிப்பாக ரேஷனில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் அந்த மாதத்தை ஓட்ட மிக முக்கியம் ஆகும்.

Tamil Nadu government approved to issue ration card to 1576 people, 22294 applications under investigation

எனவே மக்கள் அனைவருமே ரேஷன் கார்டு வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு மட்டுமின்றி ஆண்டு தோறும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இது தவிர தற்போது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் வழக்கத்தை விட அதிகமானோர் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர்.

இவ்வளவு நாட்களாக குடும்பத்துடன் வசித்தவர்கள் திடீரென அவசர அவசரமாக சமையல் சிலிண்டர்கள் வாங்கி தனி சமையலறையை ஏற்படுத்தி, விண்ணப்பித்தனர். ஏனெனில் தனி சமையல் அறையுடன் வசிப்பவருக்கு மட்டுமே 'ஆதார்' எண் அடிப்படையில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருவோரும் தனியாக அரிசி கார்டு கேட்டு கடந்த மாதம் விண்ணப்பித்ததால் எண்ணிக்கை விறுவிறுவென அதிகரித்தது. பொதுவாக சென்னையில் உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்களும் மற்ற மாவட்டங்களில் வட்ட வழங்கல் அதிகாரிகளும் விண்ணப்பங்களை பரிசீலித்து ரேஷன் கார்டு வழங்குகிறார்கள்.

ஆனால் கடந்த மாத இறுதி தொடங்கி இந்த மாதம் வரை மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடந்த காரணத்தால் கார்டில் இருந்து உறுப்பினர் பெயர் நீக்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேநேரம் இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே புதிய கார்டு கேட்டு 26,363 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1576 பேருக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள 22,294 விண்ணப்பங்கள் விசாரணையில் உள்ளதாகவும் 2134 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விண்ணப்பங்களில் 359 விண்ணப்பங்கள் மறு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் வழக்கம் போல் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம்,புதிய ரேஷன் கார்டு பெறுவது எளிதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+