நாகாலாந்து அரசுக்கு 10,000 சதுர அடி நிலத்தை இலவசமாக கொடுத்த தமிழக அரசு! பின்னணி என்ன?
சென்னை: நாகாலாந்து அரசுக்கு வேலூர் மாவட்டத்தில் 10,000 சதுர அடி நிலத்தை இலவசமாக வழங்கியிருக்கிறது தமிழக அரசு.
நாகாலாந்து அரசு சார்பில் வேலூர் மாவட்டத்தில் விருந்தினர் இல்லம் கட்டிக்கொள்வதற்காக தமிழக அரசு இந்த நிலத்தை கொடுத்திருக்கிறது.
நாகாலாந்து அரசு வேலூரில் எதற்கு விருந்தினர் இல்லம் கட்ட வேண்டும் அதற்கு எதற்கு தமிழக அரசு நிலம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழும். ஆனால் அதன் பின்னணியில் மனிதாபிமாணம் சேவையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் சிஎம்சி
வேலூரில் இயங்கி வரும் சிஎம்சி மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சிஎம்சி மருத்துவமனையை நாடி வருவதற்கு காரணம் குறைந்தக்கட்டணம். தொண்டு அடிப்படையில் அந்த மருத்துவமனை இயங்கி வருவதால் நாட்டின் நாலாபுறங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து செல்கிறார்கள்.

விருந்தினர் இல்லம்
அந்த வகையில் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இருந்தும் பெருமளவில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குக்கு நோயாளிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் அவர்கள் தங்குவதற்கு மிகுந்த சிரமப்படுவதால் வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் விருந்தினர் இல்லம் ஒன்று கட்டிக்கொடுக்க முடிவெடுத்தது நாகாலாந்து அரசு. இதையடுத்து நாகாலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இது குறித்து தெரியப்படுத்தி நிலம் கோரியிருக்கிறார்.

10,000 சதுர அடி நிலம்
தமிழக அரசும் மனிதாபிமானத்தோடும், மருத்துவச் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்காக தொண்டு உள்ளத்தோடும் வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள ராப்பாக்கம் கிராமத்தில் 10,000 சதுர அடி நிலத்தை நாகாலாந்து அரசுக்கு இலவசமாக வழங்கியது. இதனிடையே இதற்கு நன்றி தெரிவித்து நாகாலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், மருத்துவ வசதி பெறுவதற்காக வேலூர் மற்றும் இராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி இதற்கு முன்னர் நாகாலாந்து ஆளுநராக இருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நோயாளிகள் அதிகளவில் சிகிச்சைக்காக வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications