சென்னையில்.. மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகள் தளர்வு? விரைவில் வருது தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: சென்னையில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்கிறார்கள்.
சென்னையை பொறுத்தவரை, மயானங்களில், உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டால், அதற்கு பிறகு 14 வருடங்கள் கழித்தே அந்த உடலை தோண்டி எடுத்து, அதில் இன்னொரு உடலை மறு அடக்கம் செய்யும் நடைமுறை உள்ளது.

உடல் அடக்கம்: ஆனால், பெரும்பாலானவர்கள், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்துவிட்டு, அதில் கல்லறையும் கட்டுகிறார்கள். இதன்காரணமாக, மயானங்களில் இறந்தவர்களை புதைக்க இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இது தொடர்பாக அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது...
இதையடுத்து, தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், நகர்ப்புற மயானங்களில் போதிய இடவசதி இல்லாத பிரச்சினை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
மயானங்கள்: அதேபோல, மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு இடநெருக்கடி இருப்பதாக அதிகாரிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், 426 சதுர கிமீ பரப்பளவுள்ள சென்னை மாநகராட்சியில் உள்ள 208 புதைகுழிகளில் சில இடங்களில் அடக்கம் செய்ய இடமில்லை என்பது உட்பட பல்வேறு விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
கூட்ட முடிவில், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மயானங்களில் இடநெருக்கடியை போக்க விதிமுறைகள் தளர்த்தப்படவும் முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி, ஒரு உடலை தோண்டி எடுத்துவிட்டு, இன்னொரு உடலை மறு அடக்கம் செய்வதற்கான நடைமுறையை 14 ஆண்டுகளில் இருந்து, ஒரு வருடமாக குறைக்கவும் வாய்ப்பு உள்ளதாம்..
அதுமட்டுமல்ல, பெரிதாக கட்டப்பட்டிருக்கும் கல்லறையை சுற்றி கட்டியுள்ள இடங்களை, சிறியதாக மாற்றவும் அவர்களின் உறவினர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட உள்ளதாம்.. இதனால், மயானங்களில் இடவசதி கூடுதலாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.
புதிய நடைமுறை: கேரளா, மும்பை ஆகிய மாநிலங்களில் மயானங்களில் ஒரு வருடத்திலேயே மறு அடக்கம் செய்யப்பட்டு வரும்நிலையில், இதே நடைமுறை, விரைவில் சென்னையிலும் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள். எனினும், பல்வேறு மத சமூகத்தினரிடம் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல், இப்போதுள்ள நிபந்தனைகளை தளர்த்தும் முடிவை அவசர அவசரமாக எடுக்கக்கூடாது என்றும் கருத்துக்கள் கிளம்பி உள்ளன.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications