தீபாவளி படங்களுக்கு சிக்கல்? முதல் நாள் சிறப்புக் காட்சிகளே கூடாது! சண்டைக்கு வரும் தவாக வேல்முருகன்
சென்னை: திரையரங்குகளில் முதல் நாள் சிறப்புக் காட்சிகள், உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் எனவும், இது நேரடியாக பொதுமக்களின் வாழ்க்கையில் சுமையையும், ஒழுங்கின்மையையும் உருவாக்குகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழக மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திரையரங்குகளில் நடைபெறும் முதல் நாள் சிறப்புக் காட்சிகள் குறித்து தீவிர கவலை கொள்கிறது.
பண்டிகை நாட்களில் அல்லது புதியத் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில், அதிகாலை, காலை, சிறப்புக் காட்சிகள் எனப்படும் தனிக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது நேரடியாக பொதுமக்களின் வாழ்க்கையில் சுமையையும், ஒழுங்கின்மையையும் உருவாக்குகிறது.

ஏன் சிறப்புக் காட்சிகள் இரத்து செய்யப்பட வேண்டும்?
1.அரசு நிர்ணயித்த காட்சி நேரம் மாற்றி அமைக்கப்படுவதோடு, டிக்கெட்டுகளின் விலையும் விதிகளை மீறி விற்கப்படுகின்றன.
2.சட்ட ஒழுங்கு சீர்குலைவு , அதிகாலைக் காட்சிகளால் கூட்ட நெரிசல், சண்டை, போக்குவரத்து தடங்கல் மற்றும் விபத்துகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
3.மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, பள்ளிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை தவிர்க்கும் நிலையும் உள்ளது.
4.சமூகத்துக்கு தீங்கையும், பொதுமக்களுக்கு அன்றாட பயணத்தில் சிரமத்தையும், குடும்பங்களுக்குப் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்துகிறது.
சிறப்பு காட்சிகள் என்ற பெயரில், சமூகச் சீர்கேடுகளை அனுமதிக்க முடியாது.
எனவே,
தமிழக அரசு உடனடியாக முதல் நாள் சிறப்புக் காட்சிகளை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த காட்சி நேரங்கள் மற்றும் டிக்கெட் விலை, கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், விதிகளை மீறுபவர்களின் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
திரைப்படம் கலை அனுபவமாக இருக்க வேண்டும். அது சில தனியாரின் இலாபத்திற்காக, மக்களின் மீது திணிக்கப்பட்ட சுமையாக மாறக் கூடாது. எனவே, முதல் நாள் சிறப்புக் காட்சிகளை உடனடியாக இரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது." என கூறியுள்ளார்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக!












Click it and Unblock the Notifications