பல ஆண்டு கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு! ஆதரவற்ற நலிவுற்ற, கைம்பெண்கள் நலவாரியம் அமைப்பு! அரசாணை வெளியீடு!
சென்னை : கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதை உறுதி செய்ய தனி நலவாரியம் அமைக்கப்படும் என கடந்தாண்டு சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்த நிலையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் போது முதல்வர் அறிவித்ததுபோல, கைம்பெண் மகளிர் நல வாரியம் அமைக்க வேண்டும். கணவரை இழந்தவர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
வீடு கட்டும் திட்டங்களில் கூடுதல் நிதி வழங்க வேண்டுமென பல்வேறு மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. இதனையடுத்து கைம்பெண் மகளிர் நலவாரியம் அமைக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார்.
சட்டபேரவை கூட்டத்தொடரில் பேசிய அவர்," தமிழ்நாட்டில் முதியோர் நலன் காக்கும் வகையில் மாநில மூத்த குடிமக்கள் கொள்கை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பெண்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை வகுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் சமூக நலத்துறை வாரியம் கலைக்கப்பட்டு, கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் என பெயர் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது என்பதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.
இந்த வாரியத்தின் மூலம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற, நலிவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் பிரச்சனைகளை களைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராக கொண்ட வாரியம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது." என கூறப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications