சும்மா அரசியல் பேசாம.. கஞ்சாவை கட்டுப்படுத்துங்கள்.. தமிழக அரசுக்கு எல்.முருகன் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை மாநில அரசுக்கே உள்ளது என்றும் கஞ்சா, போதைப்பொருள் விவகாரத்தில் வீணான அரசியல் செய்வதை தவிர்த்து ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.
போதைப்பொருட்களை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு இதற்காக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

போதைப்பொருள் புழக்கம்
அதன்படி, போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்று எச்சரித்துள்ள போலீசார், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். என்னதான் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தாலும் இன்னொரு பக்கம் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிப்பது பெரும் சவாலாகவே போலீசாருக்கு உள்ளது.

வட மாநிலங்களில் இருந்துதான் வருகிறது
இந்த நிலையில், சென்னையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பொன்முடி, ''போதைப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்துதான் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது அது பலமடங்கு அதிகரித்து இருப்பதற்கு காரணம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிற துறைமுகங்கள் தான். குஜராத் உள்பட வட மாநிலங்களில் இருந்துதான் கஞ்சா போன்ற போதைப்பொருள் தமிழ்நாட்டிற்குள் வருகிறது.

வீணான அரசியலை தவிர்த்து விட்டு
ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இங்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களை எல்லாம் முழுமையாக தடை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மத்திய இணை அமைச்சர் எல் முருகன், வீணான அரசியலை தவிர்த்து விட்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசின் கடமை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சில் ஒன்றில் பங்கேற்ற எல். முருகன், இது குறித்து பேசியதாவது:- ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை மாநில அரசுக்கே உள்ளது. கஞ்சா, போதைப்பொருள் விவகாரத்தில் வீணான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். அதிகரித்து வரும் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்றார்.
-
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு












Click it and Unblock the Notifications