சும்மா அரசியல் பேசாம.. கஞ்சாவை கட்டுப்படுத்துங்கள்.. தமிழக அரசுக்கு எல்.முருகன் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை மாநில அரசுக்கே உள்ளது என்றும் கஞ்சா, போதைப்பொருள் விவகாரத்தில் வீணான அரசியல் செய்வதை தவிர்த்து ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.
போதைப்பொருட்களை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு இதற்காக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

போதைப்பொருள் புழக்கம்
அதன்படி, போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்று எச்சரித்துள்ள போலீசார், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். என்னதான் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தாலும் இன்னொரு பக்கம் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிப்பது பெரும் சவாலாகவே போலீசாருக்கு உள்ளது.

வட மாநிலங்களில் இருந்துதான் வருகிறது
இந்த நிலையில், சென்னையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பொன்முடி, ''போதைப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்துதான் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது அது பலமடங்கு அதிகரித்து இருப்பதற்கு காரணம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிற துறைமுகங்கள் தான். குஜராத் உள்பட வட மாநிலங்களில் இருந்துதான் கஞ்சா போன்ற போதைப்பொருள் தமிழ்நாட்டிற்குள் வருகிறது.

வீணான அரசியலை தவிர்த்து விட்டு
ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இங்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களை எல்லாம் முழுமையாக தடை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மத்திய இணை அமைச்சர் எல் முருகன், வீணான அரசியலை தவிர்த்து விட்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசின் கடமை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சில் ஒன்றில் பங்கேற்ற எல். முருகன், இது குறித்து பேசியதாவது:- ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை மாநில அரசுக்கே உள்ளது. கஞ்சா, போதைப்பொருள் விவகாரத்தில் வீணான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். அதிகரித்து வரும் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்றார்.
-
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications