சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டுமா? தமிழ்நாடு அரசின் பயிற்சி மையத்தில் சேர்வது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: குடிமைப்பணி தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்க தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் 2023ம் ஆண்டு நடைபெற உள்ள UPSC தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ள இலவச பயிற்சி குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம், அதற்கான நடைமுறை என்ன? உள்ளிட்ட தகவல்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 அண்ணாமலைக்கு பெரிய புரட்சியாளர் என்று நினைப்பு.. ஆனா அவர் சும்மா காமெடி தான்! மாணிக்கம் தாகூர் பரபர அண்ணாமலைக்கு பெரிய புரட்சியாளர் என்று நினைப்பு.. ஆனா அவர் சும்மா காமெடி தான்! மாணிக்கம் தாகூர் பரபர

தேர்வு

தேர்வு

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "தமிழக அரசின் சென்னை, அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு. 28.05.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் பயிற்சியினை அளிக்க உள்ளது.

வசதிகள்

வசதிகள்

சென்னை அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம், காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும், 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று. அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள். கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன.

விண்ணப்பம்

விண்ணப்பம்

2023-ஆம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் "www.civilservicecoaching.com வாயிலாக 07.10.2022 முதல் 27.10.2022 வரை விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும், விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது.

வகுப்புகள்

வகுப்புகள்

மேலும் பயிற்சியில் சேர விரும்பவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணைய

தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் தகுதியுடைய நபர்கள் 13.11.20022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் நுழைவத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்படும் மாணவ/மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். அதேபோல நடப்பாண்டுன் டிசம்பர் மாதத்தின் 2வது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்." என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Government of Tamil Nadu has released a notification regarding the free coaching to be provided to the students who are going to participate in the UPSC examination to be held in the year 2023. It contains information on how candidates can apply for training and the procedure for the same.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X