Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தம்பி அன்பில் மகேஷுக்கு அண்ணன் அன்பாக கோரிக்கை வைக்கிறேன்.. ஆசிரியர்களை சந்தித்த பின் சீமான் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே ஆசிரியர்கள் போரடுகிறார்கள் என்றும் எனவே இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி 5-வது நாளாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்தித்த பிறகு சீமான் இவ்வாறு கூறினார்.

தமிழகத்தில் கடந்த 2009- ஆம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடை நிலை ஆசிரியர்களுக்கும் அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடுகள் உள்ளன.

எனவே அதனைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குடும்பத்துடன் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

5-வது நாளாக போராட்டம்

5-வது நாளாக போராட்டம்

டிபிஐ வளாகத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. போராடும் ஆசிரியர்களை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், இடை நிலை ஆசிரியர்களின் போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போராடும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

 இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது

இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது

பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம் கடந்த ஆட்சியிலும் நடந்தது. கடந்த ஆட்சியில் நடந்த போராட்டத்தில் நீங்க வந்து பங்கேற்றீங்க.. 2018ல் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதோடு உறுதி அளித்தீர்கள். இப்போது அதிகாரத்திற்கு வந்து வீட்டீர்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் அந்த கோரிக்கையை நிறைவேற்றுங்க என கேட்கிறார்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றே கேட்கிறார்கள்.

இரு கட்சிகளும் மாறி மாறி..

இரு கட்சிகளும் மாறி மாறி..

கோரிக்கையும் புதிது அல்ல. போராட்டமும் புதிது அல்ல. 5 வது வருஷத்தில் அடுத்த 5 வருஷத்தில் நிறைவேற்றுவோம் என்று சொல்வார்கள். இதை 5 வயதில் இருந்தே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இரண்டு கட்சிகளும் மாறி மாறி பேசி வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலையை திறந்ததும் பெருமக்கள்தான். இப்போது ஸ்ட்ரெலைட் பற்றி பேசுவது என்றாலும் உங்கள் கூட்டத்திற்கே அனுமதி இல்லை.

நீங்கள் போய் வகுப்பு எடுப்பீர்களா..

நீங்கள் போய் வகுப்பு எடுப்பீர்களா..

ஸ்ட்ரெலைட் ஆலையை நீங்கள் எதிர்க்கிறீர்களா.. இல்லை ஆதரிக்கிறீர்களா? இந்த சிக்கல் பற்றி பேச தனிகூட்டம் தனி மேடை இருக்கு..இந்தக் கூட்டத்தில் ஆசிரியர்களின் போராட்டம் மிக நியாயமானது. புனிதமானது. பள்ளிக்கூடம் கட்டிவிட்டீர்கள். மக்களிடம் காசை வாங்கி புனரமைப்பு பணிகளையும் செய்து விட்டீர்கள். பாடம் நடத்தப்போவது யார்? பாடம் நடத்தப்போகிறவர்கள்தான் பட்டினியாக தெருவில் கிடக்கிறார்களே.. நீங்கள் போய் வகுப்பு எடுப்பீர்களா..

தம்பி அன்பில் மகேஷுக்கு அன்பு கோரிக்கை

தம்பி அன்பில் மகேஷுக்கு அன்பு கோரிக்கை

பார்த்து படிக்கும் போதே பத்து பிழை வருகிறது. நீங்கள் பாடம் நடத்துனா? மாணவன் எப்படி உருப்படுவான். எனவே பாடம் நடத்துபவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து அவர்களை பாடம் எடுக்க அனுப்புங்கள். நான் பெரிதும் அன்பு வைத்திருக்கிற தம்பி மகேஷ்.. போராடும் ஆசிரியர்களை அழைத்துப்பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அண்ணன் அன்பாக கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+