நாளை முதல் இ பாஸ் கட்டாயம்.. பறந்த உத்தரவு.. தீயாய் மாறிய அதிகாரிகள்.. இனி வாய்ப்பேயில்லை!
சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வர நாளை முதல் இ-பதிவு எனப்படும் இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் மாநில எல்லைகளில் மீண்டும் தீவிர சோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இனி இபாஸ் இல்லாமல் தமிழகம் வருவது சாத்தியமில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதன்படி வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு நாளை முதல் இ-பதிவு கட்டாயம் ஆகும்..
இங்கிலாந்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்தே வெளிநாடுகளில் இருந்து வருவோர் தீவிர கண்காணிப்புக்கு பிறகே சொந்த ஊர் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்

கண்காணிப்பு
ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் எந்த கண்காணிப்பும் இன்றி அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மற்ற மாநிலங்களைப் போல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் கேட்கப்பட்வில்லை. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவது நாளை முதல் பழையபடி கடுமையாக்கப்படுகிறது.

வெளிமாநிலங்கள்
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வர இனி கட்டாயம் இ-பதிவு காட்டாயம் செய்ய வேண்டும். அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களை கூறினாலும் இ-பாஸ் இல்லாவிட்டால் அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
எனவே நாளை முதல். இ பதிவு இல்லாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப வாய்ப்பு உள்ளதாம்.

முககவசம் கட்டாயம்
கொரோனா கட்டுப்பாடுகளை போலீஸாரும் தீவிரமாக கடைபிடிக்குமாறு காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் காரணமாக சாலைகளில் இனி முகக் கவசம் இல்லாமல் வாகனம் வருபவர்களுக்கு ரூ.200அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.அத்துடன் இனி காவல்நிலையங்களில் முககவசம் அணியாமல் சென்றால் புகார்கள் வாங்கப்படாது.

அதிகாரிகள் அதிரடி
காவல்நிலையம் மட்டுமல்ல, கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் என எங்கு சென்றாலும் முககவசம் கட்டாயம் ஆகும். முககவசம் இல்லாவிட்டால் அனுமதிக்க கூடாது. தொழில் நிறுனங்களும் முககவசம் அணியாமல் யாரையும் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது. இந்த உத்தரவுகளை கடைபிடிக்க வைக்க அதிகாரிகள் குழு அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் தீவிர ஆய்வு செய்ய உள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications