தமிழ்நாட்டில் உருவாகுது இன்னும் 3 நகராட்சி.. மூன்றுமே செம சர்ப்ரைஸ் முடிவு.. இது லிஸ்டுலேயே இல்லையே
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரத்தை தற்போதைய பேரூராட்சிகளில் இருந்து இரண்டாம் தர நகராட்சிகளாக தரம் உயர்த்த மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MAWS) ஆணை பிறப்பித்துள்ளது.
மகாபலிபுரம், ஸ்ரீபெரும்புதூருடன், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறும் இரண்டாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12 தேதியிட்ட உத்தரவின்படி, 2023-2024 பட்ஜெட் கூட்டத்தொடரில், பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார். இந்த அறிவிப்பின் அடிப்படையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மகாபலிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவையாறு ஆகிய கவுன்சில்களின் மாற்றத்தை அனுமதித்து தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டனர்.

உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள்தொகை 30 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என விதிமுறைகள் கூறினாலும், மூன்று உள்ளாட்சி அமைப்புகளும் இந்த விதியை பூர்த்தி செய்ய முடியாத நிலையிலும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை சுற்றி பல தொழிற்சாலைகள் உள்ளது, கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டால், நகரம் மேலும் வளர்ச்சி அடையும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாபலிபுரம் மற்றும் திருவையாறு பகுதிகளில், சுற்றுலாத் தலங்கள் (மகாபலிபுரம்) மற்றும் தியாகராஜர் கோயில் (திருவையாறு) இருப்பதை சுட்டிக்காட்டி மேம்படுத்துவதை துறை நியாயப்படுத்தியது.
3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், வார்டுகளின் எல்லை நிர்ணயம் செய்து தரம் உயர்த்துவதற்கான இறுதி அறிவிப்பு வெளியிடப்படும். தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் பல்வேறு தரங்களில் 138 நகராட்சிகள் உள்ளன. ஆண்டு சராசரி வருவாய் ரூ.6 கோடிக்கு குறைவாக உள்ள நகராட்சிகள் இரண்டாம் தர நகராட்சிகளாகவும், ரூ.6 கோடி முதல் ரூ.9 கோடி வருவாய் ஈட்டும் நகராட்சிகள் முதல் தர நகராட்சிகளாகவும் உள்ளன. மறுபுறம், ரூ.9 கோடி முதல் ரூ.15 கோடி வரை வருவாய் ஈட்டும் நகராட்சிகள் தேர்வு தர நகராட்சிகளாகும் உள்ளன. ஆண்டு வருவாய் ரூ.15 கோடிக்கு மேல் உள்ள நகராட்சிகள் சிறப்பு தர நகராட்சிகளாகவும் உள்ளன.
சாட்டிலைட் நகரங்கள்: சென்னையின் திருமழிசை, செங்கல்பட்டு, மீஞ்சூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மாமல்லபுரம் ஆகிய 6 செயற்கைக்கோள் நகரங்களை மேம்படுத்துவதற்காக நிலம் சேகரிப்பு திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன.
சென்னைக்கு அருகே ஆறாவது புதிய நகரமாக (செயற்கைக்கோள் நகரம்) மகாபலிபுரம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் கீழ் மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சார்பாக இங்கே உயர்த்தப்பட உள்ள கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மகாபலிபுரம்: இந்த நிலையில்தான் சென்னையின் திருமழிசை, செங்கல்பட்டு, மீஞ்சூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மாமல்லபுரம் ஆகிய 6 செயற்கைக்கோள் நகரங்களை மேம்படுத்துவதற்காக நிலம் சேகரிப்பு திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வளவந்தாங்கல், சந்தானம்பட்டு, நெம்மேலி, கிருஷ்ணங்கரணை, திருப்போரூர், சலுவன்குப்பம், பட்டிப்புலம், தண்டலம், வெங்கலேரி, ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், பையனூர், சிறுதாவூர், அதிகமநல்லூர், காரணை, பஞ்சானந்தூர், அமஞ்சான்பட்டி, அமஞ்சான்பட்டி, அமமுகநல்லூர், அமமுகநல்லூர், தஞ்சைநல்லுார், ஆகிய வருவாய் கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. , கொக்கிலிமேடு, மகாபலிபுரம், பூஞ்சேரி, காடம்பாடி, மற்றும் பெருமளேரி-வடகடம்பாடி-நல்லான்பிள்ளைப்பெற்றல் ஆகிய 25 கிராமங்கள் உயர்த்தப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications